ஆன்மிக கேள்வி பதில்: அனுமனுக்கு உதவிய சமுத்திர ராஜன் ராமனுக்கு ஏன் உடனே உதவவில்லை?

samavedam pic - 2026

கேள்வி:- ராமாயணம் சுந்தர காண்டத்தில் அனுமனிடம் மைநாக பர்வத்தின் மேல் சிறிது ஓய்வெடுக்கும்படி கூறிய சமுத்திர ராஜன், பின்னர் யுத்த காண்டத்தில் ராமன் மூன்று நாட்கள் தர்ப்பை ஆசனத்திலிருந்த பின்பே ராம பாணத்திற்கு பயந்து மட்டுமே வழி அமைத்துத் தந்தான். எதனால் இப்படி?

பதில்:- சமுத்திர ராஜனும் பரமத்வாவான ஸ்ரீ ராமனுக்கு தாசனே. அதனால்தான் ராம காரியமாகச் செல்லும் ஹனுமனை ஓய்வெடுப்பதற்காக வரவேற்று உபசரிக்கும்படி மைநாகத்திடம் கூறினான். ஆயின் ஸ்ரீராமனுக்கு உடனே வழிவிடாமல் சில நாட்கள் கழித்து வழி அமைத்ததில் சிறந்த உட்பொருள் உள்ளது.

குறி பார்த்துத் தொடுத்த ராம பாணத்தின் மூலம் அங்கு அருகில் ‘த்ருமகுல்யர்கள்’ என்ற பிரதேசத்தில் இருந்து கொண்டு சமுத்திர ராஜனுக்குத் துன்பம் விளைவித்த ராட்சசர்களை அழிக்க வேண்டுமென்பது சமுத்திரனின் உத்தேசம். எனவேதான் ராமன் அம்பை எடுத்து பாணம் தொடுக்கும் வரை பொறுத்திருந்தான். அதன் பின் ராமனை பிரார்தித்து, த்ருமகுல்யர்களின் இடத்தில் அசுரர்களை வதைக்கும்படி வேண்டினான். ராமனும் அவனுடைய வேண்டுகோளை ஏற்றான். இது முக்கியமான காரணம்.

ஆனால் இதில் மற்றொரு பொருளும் உள்ளது. இயற்கை சக்திகளை அனுகூலமாக்கிக் கொள்வதற்கு சனாதன தர்மத்தில் பலவித தீக்ஷை வழி முறைகள் கூறப்பட்டுள்ளன. முதலில் அந்த தீட்சைகளை மேற்கொண்டு இயற்கை சக்திகளின் அதிஷ்டான தேவதைகளை உபாசனை செய்து பிரசன்னம் செய்து கொள்ள வேண்டும். அப்போது பிரக்ருதி அனுகூலமளிக்கும். இந்த தர்மத்தை நமக்கு போதிப்பதற்காகவே தர்ப்பை ஆசனத்தில் தீட்சையாக இருந்து காட்டினான் ஸ்ரீ ராமசந்திரமூர்த்தி.

 ஆன்மீக மற்றும் தார்மீக சந்தேகங்கள் சிலவற்றுக்கு பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்கள் மிகச் சிறப்பாக, சாஸ்திர ஆதாரத்தோடு அளித்துள்ள பதில்களில் இருந்து...

தெலுங்கில் இருந்து தமிழாக்கம்- ராஜி ரகுநாதன்
(ஆதாரம்:- சமாதானம் பாகம் -2 என்ற நூலிலிருந்து..)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories