ஆன்மிக கேள்வி பதில்: அனுமனுக்கு உதவிய சமுத்திர ராஜன் ராமனுக்கு ஏன் உடனே உதவவில்லை?

samavedam pic - 2026

கேள்வி:- ராமாயணம் சுந்தர காண்டத்தில் அனுமனிடம் மைநாக பர்வத்தின் மேல் சிறிது ஓய்வெடுக்கும்படி கூறிய சமுத்திர ராஜன், பின்னர் யுத்த காண்டத்தில் ராமன் மூன்று நாட்கள் தர்ப்பை ஆசனத்திலிருந்த பின்பே ராம பாணத்திற்கு பயந்து மட்டுமே வழி அமைத்துத் தந்தான். எதனால் இப்படி?

பதில்:- சமுத்திர ராஜனும் பரமத்வாவான ஸ்ரீ ராமனுக்கு தாசனே. அதனால்தான் ராம காரியமாகச் செல்லும் ஹனுமனை ஓய்வெடுப்பதற்காக வரவேற்று உபசரிக்கும்படி மைநாகத்திடம் கூறினான். ஆயின் ஸ்ரீராமனுக்கு உடனே வழிவிடாமல் சில நாட்கள் கழித்து வழி அமைத்ததில் சிறந்த உட்பொருள் உள்ளது.

குறி பார்த்துத் தொடுத்த ராம பாணத்தின் மூலம் அங்கு அருகில் ‘த்ருமகுல்யர்கள்’ என்ற பிரதேசத்தில் இருந்து கொண்டு சமுத்திர ராஜனுக்குத் துன்பம் விளைவித்த ராட்சசர்களை அழிக்க வேண்டுமென்பது சமுத்திரனின் உத்தேசம். எனவேதான் ராமன் அம்பை எடுத்து பாணம் தொடுக்கும் வரை பொறுத்திருந்தான். அதன் பின் ராமனை பிரார்தித்து, த்ருமகுல்யர்களின் இடத்தில் அசுரர்களை வதைக்கும்படி வேண்டினான். ராமனும் அவனுடைய வேண்டுகோளை ஏற்றான். இது முக்கியமான காரணம்.

ஆனால் இதில் மற்றொரு பொருளும் உள்ளது. இயற்கை சக்திகளை அனுகூலமாக்கிக் கொள்வதற்கு சனாதன தர்மத்தில் பலவித தீக்ஷை வழி முறைகள் கூறப்பட்டுள்ளன. முதலில் அந்த தீட்சைகளை மேற்கொண்டு இயற்கை சக்திகளின் அதிஷ்டான தேவதைகளை உபாசனை செய்து பிரசன்னம் செய்து கொள்ள வேண்டும். அப்போது பிரக்ருதி அனுகூலமளிக்கும். இந்த தர்மத்தை நமக்கு போதிப்பதற்காகவே தர்ப்பை ஆசனத்தில் தீட்சையாக இருந்து காட்டினான் ஸ்ரீ ராமசந்திரமூர்த்தி.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

 ஆன்மீக மற்றும் தார்மீக சந்தேகங்கள் சிலவற்றுக்கு பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்கள் மிகச் சிறப்பாக, சாஸ்திர ஆதாரத்தோடு அளித்துள்ள பதில்களில் இருந்து...

தெலுங்கில் இருந்து தமிழாக்கம்- ராஜி ரகுநாதன்
(ஆதாரம்:- சமாதானம் பாகம் -2 என்ற நூலிலிருந்து..)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories