ஆன்மிக கேள்வி-பதில்: ஐயப்ப பூஜை சனாதன வழிமுறையை சேர்ந்தது இல்லையா?

samavedam pic e1528682651403 - 2026

கேள்வி:- ஐயப்ப பூஜை பற்றி புராணங்களில் இல்லை என்றும், அது நம் சனாதன தர்ம வழி முறையைச் சேர்ந்தது அல்லவென்றும் சில ஹிந்துக்களே கூறுகின்றனரே! உண்மையில் அதற்கு புராண ஆதாரம் இல்லையா? ‘சிவ கேசவ சுதன்’ என்ற கதைக்கு ஆதாரம் என்ன?

பதில்:- தெய்வங்கள் மந்திர சொரூபம் கொண்டவர்கள். எத்தனை மந்திரங்கள் உள்ளனவோ அத்தனை தெய்வங்கள் உள்ளனர். மந்திர சாஸ்திரத்தோடு தொடர்புடைய சில புராணங்கள் உள்ளன. அவற்றின் ஆதாரத்தோடு பூஜிக்கப்படும் தெய்வங்கள் நிறைய உள்ளனர். அது போன்று ஆராதிக்கப்படும் தெய்வமே சாஸ்தா.

‘சாஸ்தா’ என்றால் ‘உத்தரவிடுபவர்’ என்று பொருள். அதாவது ‘குரு ஸ்தானம்’. ‘குரு’ என்ற வணங்குதலுக்குரிய பாவனையையே மலயாள மொழியில் ‘ஐயப்பா’ என்று அழைக்கின்றனர். வேதாந்த வித்யையாக உருவெடுத்தவர் சாஸ்தா.

புராணங்கள் சிலவற்றில் ஐயப்பா பற்றிய குறிப்புகள் ஸ்பஷ்டமாக உள்ளன. முக்கியமாக பிரம்மாண்ட புராணத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளது.

புனர் க்ருஹீத்வா தாமீஸ: காமம் காம வசீக்ருத:
ஆஸ்லிஷ்யத திவேகேன தத்வீர்யம் ப்ரச்யுதம் ததா
ததஸ்ஸ முதிதோ தேவோ மஹா சாஸ்தா மஹா பல:
அனேக கோடி தைத்யேந்த்ர கர்வ நிர்வாபண க்ஷம:

ALSO READ:  Videsi se Desi: A New Era of Secure and Aatmanirbhar Digital Communication!

மோகினி ரூபமெடுத்த விஷ்ணு, சாட்சாத் பராசக்தியின் சொரூபமே. விஷ்ணு எடுத்த ‘சிவனை மோகிக்கச் செய்யும்’ ரூபத்தைப் பார்த்து மோகத்தில் ஆழ்ந்தார் சிவன். அவர்கள் இருவரின் தனயன் மஹா சாஸ்தா. புராணங்களில் ஓரிடத்தில் கூறப்படுவதற்கு வேறோரிடத்தில் விளக்கம் கிடைக்கும். ஏதோ சில நூல்களை மட்டுமே பார்த்துவிட்டு மற்றவை புராணங்கள் அல்ல என்று கூறக் கூடாது. அவரவர் பிரமாணங்கள் அவரவருக்கு இருக்கும். கதை வடிவம் ஒரு பக்கம் இருக்க, விக்ரக ஸ்வரூபம், ஆராதனை, ஆகம விதானங்களைப் பரிசீலித்தால் தத்துவம் புரிபடும்.

ஹரிஹர அத்வைதத்திற்கும், பிரம்ம வித்யைக்கும் குறியீடு ஐயப்பன். ஆகமங்களில் ஹரிஹர மூர்த்தியின் ஆராதனை உள்ளது. இந்த ஏக தத்துவ உபாசனை, பக்திக்கும் தர்மத்திற்கும் உற்சாகமூட்டக் கூடியது. இது போன்ற சிறந்த சுவாமியையும் சிறந்த உபாசனையையும் இல்லை என்று கூறுவதால் கிடைக்கும் பலன் என்ன? சிவ கேசவ தத்துவங்களின் கருத்தொற்றுமையை அங்கீகரிக்க இஷ்டமின்றி, வேற்றுமை வாதம் புரிபவர்கள் நம் சனாதன தர்மத்தில் நுழைக்கும் பிரிவினைகளின் ஒரு பாகமே ஐயப்பனை இல்லை என்று விமர்சிப்பது.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

இந்த பரந்த பாரத தேசத்தில் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு விதமாக தெய்வ சக்தி பல்வேறு பாவனைகளொடு ஆகம விதி முறைகளோடு ஆராதனை செய்யப்படுகிறது. அனைத்தையும் சனாதன தர்மத்தின் பாகமாக அறியும் போதுதான் முழுமையான ஹிந்துக்களின் ஒற்றுமை சாத்தியமாகும்.

***

ஆன்மீக மற்றும் தார்மீக சந்தேகங்கள் சிலவற்றுக்கு பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்கள் மிகச் சிறப்பாக, சாஸ்திர ஆதாரத்தோடு அளித்துள்ள பதில்களில் இருந்து…

தெலுங்கில் இருந்து தமிழாக்கம்- ராஜி ரகுநாதன்
(ஆதாரம்:- சமாதானம் பாகம் -2 என்ற நூலிலிருந்து..)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Entertainment News

Popular Categories