திருக்கோஷ்டியூர் திருத்தலம்:

Published:

THIRUKOSHTIYUR TEMPLE :
SWAMY RAMANUJA’S STATUE

Thirukkoshtiyur 8 - 2026
Thirukkoshtiyur ramanujar+upadesam - 2026

Thirukkoshtiyur ashtanga+vimanam4 - 2026
Thirukkoshtiyur ashtanga+vimanam5 - 2026
Thirukkoshtiyur gopuram - 2026
Thirukkoshtiyur mamuni+sannidhi - 2026

Thirukkoshtiyur 9 - 2026
Thirukkoshtiyur ashtanga+vimanam - 2026
Thirukkoshtiyur ashtanga+vimanam1 - 2026
Thirukkoshtiyur ashtanga+vimanam2 - 2026
Thirukkoshtiyur ashtanga+vimanam3 - 2026

 

Thirukkoshtiyur 4 - 2026
Thirukkoshtiyur 5 - 2026
Thirukkoshtiyur 6 - 2026
Thirukkoshtiyur 7 - 2026

Thirukkoshtiyur+gopuram+entrance - 2026
Thirukkoshtiyur+praharam - 2026
Thirukkoshtiyur 1 - 2026
Thirukkoshtiyur 2 - 2026
Thirukkoshtiyur 3 - 2026

திருக்கோஷ்டியூர் திருத்தலம்
மதுரையிலிருந்து அல்லது, திருச்சி-புதுக்கோட்டை-திருமயம்- வழியாகச் சென்றால் திருப்பத்தூர் அடையலாம். அங்கிருந்து கால் மணி பயணத்தில் திருக்கோஷ்டியூர் செல்லலாம்.

 

இந்தத் திருத்தலம், சுவாமி ராமானுஜரால் உலகப் பிரசித்தி பெற்றது. காரணம், இங்குள்ள சௌமிய நாராயணப் பெருமாள் ஆலயத்தின் அஷ்டாங்க விமானத்தின் மதில் மீது ஏறி நின்றுதான், ஸ்வாமி ராமானுஜர் தமக்கு குருவான நம்பியிடமிருந்து ரஹஸ்யார்த்தங்களை உபதேசம் பெற்று, அதை பொதுவில் எல்லோர்க்கும் வெளிப்படுத்தினார். உலகுய்ய இந்த உபதேச ரஹஸ்யார்த்தங்களைச் சொன்ன இடத்தில் சுவாமி ராமானுஜரின் கல் திருமேனியும், சுதை மேனி ஒன்றும் அமைத்திருக்கிறார்கள். அந்தத் திருமேனியின் பின்னிருந்து நாம் பார்த்தால் ஒரு வீதி அழகாகத் தெரிகிறது. ஸ்வாமி ராமானுஜர் சொன்னதை பயபக்தியுடன் கேட்டு மகிழ்ந்த பக்தர்கள் எப்படி இருந்து கேட்டிருப்பார்கள் என்ற கற்பனையை நம் மனத்திரையில் போட்டுக் கொள்ளலாம். அந்தத் தெருவில்தான் நம்பிகளின் இல்லமும் இருந்திருக்கிறது. அதையும் நாம் அஷ்டாங்க விமானத்தின் மேலிருந்து தரிசிக்கலாம்.

 

அஷ்டாங்க விமானம் என்பது மிகவும் சிறப்பான ஒன்று. மதுரை கூடல் அழகர் சன்னிதியிலும், திருக்கோஷ்டியூர் சௌம்ய நாராயணப் பெருமாள் சன்னிதியிலும், உத்திரமேரூர் பெருமாள் சன்னிதியிலும் இந்த அஷ்டாங்க விமான சேவையை அடியேன் தரிசித்திருக்கிறேன்.

 

இந்த விமானத்தில், ஆடல்வல்லான் நடராஜப் பெருமான், உபதேச மூர்த்தியாக நின்ற தட்சிணாமூர்த்திப் பெருமான், சக்கரத்தாழ்வார், நரசிம்ம ஸ்வாமி என்று பலவிதமான சுதை உருவங்கள் அமைக்கப்பெற்றுள்ளன. வண்ணமயமான இந்த அஷ்டாங்க விமான சேவை என்பது, நம் பாவங்களைப் போக்க வல்லது. அந்த சேவையை அன்பர்களுக்காக அடியேன் இங்கே தந்திருக்கிறேன்.

 

அன்பன்

 

செங்கோட்டை ஸ்ரீராம்.
ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.2 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img