சிவபெருமானுக்கு… இவற்றால் அபிஷேகம் செய்தால்… இந்த பலன்கள் கிட்டும்!

Published:

shiva ratri - 2026

சிவபிரானுக்கு எவற்றால் அபிஷேகம் செய்தால் என்ன பலன்?

அருகம்புல் நீரால் அபிஷேகம் செய்தால் நஷ்டமான பொருட்கள் திரும்ப கிடைக்கும்.

நல்லெண்ணெய் அபிஷேகம் செய்தால் அபம்ருத்யு விலகிப்போகும்.

பசும்பால் அபிஷேகம் செய்தால் சகல சௌக்கியங்களையும் பெறலாம்.

தயிரால் அபிஷேகம் செய்தால் பலம், ஆரோக்கியம், யசஸ்ஸு கிடைக்கும்.

பசு நெய்யால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்யம் கிடைக்கப்பெறும்.

கரும்பு ரசத்தால் அபிஷேகம் செய்தால் தனவிருத்தி கிடைக்கும்.

பொடியான சக்கரையால் அபிஷேகம் செய்தால் துக்கம் நாசமாகும்.

வில்வ இலை ஜலத்தால் அபிஷேகம் செய்தால் போக பாக்கியங்கள் கிடைக்கும் .

தேனால் அபிஷேகம் செய்தால் தேஜஸோடு பிரகாசமாக விளங்குவோம்.

புஷ்பங்களை நனைத்து தண்ணீரால் அபிஷேகம் செய்தால் பூமி, நிலம், லாபம் பெறலாம் .

இளநீரால் அபிஷேகம் செய்தால் சகல சம்பத்துகளும் கிடைக்கப் பெறுவோம்.

ருத்ராட்ச ஜலத்தால் அபிஷேகம் செய்தால் சகல ஐஸ்வர்யங்களும் பெறுவோம்.

பாலபிஷேகம் செய்தால் மகா பாவங்கள் தொலையும்.

சந்தன நீரால் அபிஷேகம் செய்தால் சத் புத்திர பிராப்தி கிடைக்கும்.

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

தங்கத்தை நீரில் நனைத்த அந்த நீரால் அபிஷேகம் செய்தால் கோரமான தரித்திரம் விலகிப்போகும்.

சுத்தமான நீரால் அபிஷேகம் செய்தால் நஷ்டமானவை திரும்பப் பெறலாம்.

  • அன்ன அபிஷேகத்தால் அதிகாரப் ப்ராப்தி, மோக்ஷம் மற்றும் தீர்காயுள் கிடைக்கும்.
  • சிவபூஜையில் அன்ன லிங்கார்ச்சனைக்கு பிரதானமான முக்கியத்துவம் உள்ளது .
  • தயிர் கலந்த அன்னத்தை சிவலிங்கத்துக்கு முழுமையாக பூசி பூஜை செய்வார்கள்.
  • சிவலிங்கத்தின் மேல் அமைத்த அன்னத்தை பிரசாதமாக பூஜைக்கு பிறகு விநியோகிப்பார்கள்.
  • பார்ப்பதற்கு மிக மிக அழகாக இருக்கும் அன்ன லிங்க அர்ச்சனை .

அடுத்து … திராட்சை ரசத்தால் அபிஷேகம் செய்தால் ஒவ்வொன்றிலும் வெற்றி கிடைக்கும்.

பேரிச்சம் பழ ரசத்தால் அபிஷேகம் செய்தால் பகைவர்களின் தீமை விலகும்.

நாகப்பழ ரசத்தால் அபிஷேகம் செய்தால் வைராக்கிய சித்தி கிடைக்கும்.

கஸ்தூரி கலந்த நீரால் அபிஷேகம் செய்தால் சக்கரவர்த்தி ஆகலாம்.

நவரத்னங்கள் நனைத்த நீரால் அபிஷேகம் செய்தால் தான்யம், இல்லம், பசுக்கள் அபிவிருத்தி கிடைக்கும் .

மாம்பழ ரசத்தால் அபிஷேகம் செய்தால் தீர்க்க வியாதிகள் தொலையும்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மஞ்சள் நீரால் அபிஷேகம் செய்தால் மங்களம் மங்களம் மங்களம் சுப காரியங்கள் எல்லாம் நிகழும்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img