“காதில் விழவே இல்லையா”?

Published:

“காதில் விழவே இல்லையா”? ரா.வேங்கடசாமி காஞ்சி மகானின் கருணைக்கு எல்லையே இல்லை . தனது அத்யந்த பக்தர்கள் தன்னை எந்த நேரத்தில் அழைத்தாலும் அவர்களுக்கு அருளாசி வழங்காமல் இருந்ததே இல்லை . திரு ராஜகோபாலின் மனைவி கீதா பலவருடங்களுக்கு முன்பு சென்னையில் வசித்துகொண்டிருந்த சமயம் , மகானிடம் பெரும் பக்தி , அவருக்கு மட்டுமல்ல அவரது குடும்பமே மகானை கண்கண்ட தெய்வமாக வணங்கி வந்தனர் . ஒரு சமயம் கீதாவின் தந்தைக்கு உடல் நலம் சரியில்லை , எல்லா விதமான மருத்துவ சிகிச்சையும் கிடைக்கசெய்து மசியாத அந்த நோய் அவரை படுத்த படுக்கயக்கி விட்டது மருத்துவ சிகிச்சை தொடர்ந்தாலும் கீதா மகானிடம் வேண்டாத நாளில்லை , இருப்பினும் தந்தையின் உடல் நாளுக்கு நாள் மோசமகிகொண்டு வர , ஒரு நாள் அவர் மூச்சு விடவே மிகவும் சிரமப்பட்டார் , அந்த நிலை நீடித்தால் சில மணி நேரங்களில் அவர் உயிர் பிரிய நேரும் பூஜை அறைக்கு போய் மகானின் படத்தின் முன் விழுந்து நமஸ்கரித்துவிட்டு ” இதனை நாளாக என் குறையை தீர்த்து வையுங்கள்” என்று கதறிக்கொண்டு இருக்கின்றேனே பெரியவா உங்கள் காதில் விழவே இல்லையா , காதில் விழவே இல்லையா என்று கடைசியாக வாய் விட்டு கதறிய போது வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது அங்கே சென்று கதவை திறந்தபோது ” கஞ்சி மடத்தில் இருந்து வருகின்றோம் மகா பெரியவா இந்த பிரசாதத்தை உங்களன்ண்ட கொடுக்க சொன்னார்” என்றனர் வந்தவர் காதில் விழவே இல்லையா என்ற குரல் கேட்காமலா இந்த பிரசாதங்களை அனுப்பி இருக்கின்றார் , கண்களில் நீர் பெருக கீதா அவசர அவசரமாக ஸ்ரீ மடத்தில் இருந்து வந்த தீர்த்தத்தை தான் தந்தையின் வாயில் ஊற்ற , அவரது மூச்சு திணறல் நின்றது , அதன் பிறகு அவர் தந்தை நீண்டநாள் சுகமாக வாழ்ந்தார் என்பது தான் வியப்பிற்குரிய விஷயம் மகான் தன் பக்தர்களை பற்றி அல்லும் பகலும் நினைக்காமலா இருகின்றார் ? “காதில் விழவில்லையா என்று கேட்டவுடன் காலிங் பெல் சப்தம் கேட்டது எப்படி?10357599_860696523975514_1831596007967451521_n

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img