“இதை எழுதினவா பேர் என்ன?”

Published:

“இதை எழுதினவா பேர் என்ன?

அவர் பெங்களூரா?” சொன்னவர்-ராதா ராமமூர்த்தி.

தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.

 தட்டச்சு-வரகூரான் நாராயணன்
 
பெங்களூரிலிருந்து புதுக்கோட்டை வந்திரூந்த என்
நாத்தனாரின் கணவர், ஸ்ரீராமஜெயம் எழுதிய ஒரு
நோட்டையும் பத்து ரூபாய் பணத்தையும் கொடுத்து
“இதை மஹா பெரியவாளிடம் வைத்து, பெங்களூர்
குப்புசாமி அய்யர் இந்த நோட்டையும் பத்து ரூபாயையும்
சமர்ப்பிக்கச் சொன்னார் – என்று சொல்லு” என்று கூறி
என்னிடம் கொடுத்தார். காஞ்சி ஸ்ரீ மடத்துக்குள் நான் சென்றபோது மஹாபெரியவாள் பக்கத்தில் நல்ல கூட்டம். பெரிய
பண்டிதர்கள்,பெரிய மனிதர்கள் எல்லாம் இருந்தார்கள்.
ரொம்ப நேரம் நிற்க முடியாததால், யாரோ வைத்திருந்த
பழத்தட்டின் மேல் ஸ்ரீராமஜெயம் நோட்டையும், பத்து 
ரூபாய் பணத்தையும் வைத்துவிட்டு நகர்ந்து நின்று
கொண்டேன். கொஞ்சம்,கொஞ்சமாகக் கூட்டம்
கலைந்தது. பெரியவாளும் எழுந்து நின்றார்.
அவர் கையில் அந்த நோட்டு.
 
“இதை யார் வைத்தது?” என்று கேட்டார்கள்.
 
“நான்” என்றேன்.
 
“இதை எழுதினவா பேர் என்ன? அவர் பெங்களூரா?
இதைத் தவிர வேறு என்ன கொடுத்தார்?
 
-என்று பெரியவா கேட்கவும், ஆடிப் போய் விட்டேன்.
“பெரியவா ! பெங்களூரிலிருந்து குப்புசாமி அய்யர்
புதுக்கோட்டை வந்திருந்தார். இந்த நோட்டையும்
பத்து ரூபாயும் கொடுத்தார். நான் பெரியவாளிடம்
சொல்லாமல் வைத்தது தப்புதான்; மன்னிக்க
வேண்டும் என்றேன்.
 
நான் சொல்லத் தயங்கியதை என் வாயால்
சொல்ல வைத்து விட்டார்கள். முகத்தில்
என்னைப் பார்த்து ஒரு சிரிப்பு வேறு!
 
பெரியவாளிடம் எதையும் மறைக்க முடியாது.
என்ன சொல்லச் சொன்னாலும் அப்படியே சொல்லி
பெரியவாளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை
இந்தச் சம்பவம் எனக்கு உணர்த்தியது246400_479182102136836_1433845875_n
ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img