ஶ்ரீரங்கம் பகல் பத்து -நான்காம் திருநாள்

பகல் பத்து -நான்காம் திருநாள் (14-12-15 விவரம்)
2 அரையர் சேவைகளும்,கம்சவதமும்…..

நம்பெருமாள் வழக்கம் போல்,புறப்பட்டு அர்ஜுன மண்டபம் எழுந்தருளி ,ஆழ்வார் மற்றும் ஆச்சாரியர்களுக்கு
மரியாதை ஆகி உகப்புடன் சேவை சாதிப்பார்…

இன்றைய பகல் பத்து நான்காம் திருநாளில்,2 அரையர்
சேவைகள் நடைபெறும்.”நாச்சியார் திருமொழி”
பாசுரங்களில் (13 ம் பதிகம்)
“கண்ணன் என்னும் கருந்தெய்வம்”தொடங்கி,(14 ம் பதிகம்)
20 பாடல்களும் சேவிக்கப் பெற்று,”குலசேகர ஆழ்வார்” அருளிச்செய்த, “பெருமாள் திருமொழி” 105 பாசுரங்களும்
“திருமழிசையாழ்வார்” அருளிச்செய்த, “திருச்சந்தவிருத்தம்”
120 பாசுரங்களும்,ஆக மொத்தம் 245 பாசுரங்கள் ,அரையர் ஸ்வாமிகளால்,அரங்கன் முன்பு சேவிக்கப்படும்.

இவற்றில்”கண்ணன் என்னும் கருந்தெய்வம்”எனத் தொடங்கும் “நாச்சியார் திருமொழி” பாசுரத்திற்கும்,”இருளிரிய” எனத் தொடங்கும், “குலசேகர ஆழ்வார்” அருளிச்செய்த,
“பெருமாள் திருமொழி” ஆகிய இந்த இரண்டு பாசுரங்களுக்கும், அபிநய வியாக்கியானங்கள் செய்யப்படும்.
“திருச்சந்த விருத்தத்தில்” ஒரு பாட்டிற்கு கூட
வியாக்கியானம் சேவிக்கப்படுவது,இல்லை….

இன்று இரண்டு அரையர் சேவை நடைபெறும் …அதில்

முதல் அரையர் சேவையில்…

“கஞ்சைக் காய்ந்த கருவில்லி”என்ற “நாச்சியார் திருமொழி” பாசுரத்தில்,கஞ்சனைப்(கம்சன்) பற்றிய குறிப்பு வரப்பெற்றதால்,
கம்ஸ வாதத்தை நடிப்பதற்காகவே, அத்திருமொழி பாட்டுக்கள் எட்டினை விட்டுவிட்டு,மற்றைய பாட்டுக்கள் சேவிக்கப்படும்.

“இருளிரிய” எனத் தொடங்கும், “குலசேகர ஆழ்வார்” அருளிச்செய்த, “பெருமாள் திருமொழி”முதல் பாட்டு, வியாக்கியானம் பூர்த்தியானதும்,அரையர் ஸ்வாமிகளுக்கு
“குலசேகர ஆழ்வார்”சந்நிதியில் இருந்து, பஹுமாணம் (மரியாதைகள்) வரும்…

இனி இரண்டாம் அரையர் சேவை…..(கம்ஸ வதம்)

கம்ஸவத விசயமான, “தம்பிரானடி”வியாக்கியானங்கள் சேவித்து,கம்ஸவதத்தினை நடித்து,முதல் அரையர்
சேவையில் விட்ட, “நாச்சியார் திருமொழி “யின் எட்டு பாட்டுகளும் சேவிக்கப்படும்.

பிறகு வழக்கம்போல் நிவேதனம்,ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் புறப்பாடு,கண்டருளியபிறகு,நம்பெருமாளும் புறப்பாடு கண்டருளி,பத்தியுலாத்துதல் ஆகி, சர்ப்பகதியில் கர்ப க்ருஹம் எழுந்தருளுவார்…

பண்டைய காலங்களில் அரையர்கள்,ஆழ்வார்களின் பாசுரங்களைப் பாடி,மகிழ்வித்தபோது கொண்ட அனுபவங்களை,”நம்பிள்ளை”என்னும் ஆச்சாரியர்,தமது “திருவாய்மொழி” உரையில் குறிப்பிட்டு உள்ளார்…

தற்பொழுது சில குறிப்பிட்ட பாசுரங்களுக்கு மட்டுமே,
அரையர்களால்,அபிநயமும், விரிவுரையும் சேவிக்கப்பட்டு வருகிறது.ஆனால் பூர்வச்சாரியர்களின் காலத்தில்,அவர்கள் நியமித்தருளிய பாசுரங்களுக்கு மட்டுமே,அபிநயம் நடைபெற்றது….

“ஆழ்வார் திருவரங்கப் பெருமாளரையர்” ஸ்வாமி என்பவர்,
“ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா மடிமை செய்யவேண்டும் நாம்” என்ற பாடலை இசைக்கும் போதெல்லாம்,
ஒழிவில் காலமெல்லாம் என்ற தொடரை வெகுநேரம் பாடி, மேலே பாடமுடியாமல்,அத்தோடு பாசுரங்களை நிறுத்திப் போவாராம்.அந்த அரையர் நம்மாழ்வாருக்கு,எம்பெருமானின் மீது,இவ்வளவு பக்தியும்,ஆழ்ந்த ஞாணமும் இருந்ததை நினைத்து மனமுருகி பாசுரங்களை மேலே பாடமுடியாமல் மெய்மறந்து நிறுத்தி விடுவாராம்…

இதே போல் பிள்ளை திருநறையூர் அரையர், என்பவர், திருவாய்மொழியை அனுபவிக்கத் தொடங்கும்போதே,பக்தி மேலிட்டு,மனமுருகி ,கண்ணீர் ததும்ப நிற்பாறாம்.இந்த நிகழ்வை “நஞ்சீயர்” நேரில் கண்டு,அதை தம்முடைய சீடரான,”நம்பிள்ளை” ஸ்வாமிக்கு சொன்னதாக வரலாறு கூறுகிறது..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Topics

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Entertainment News

Popular Categories