ஶ்ரீரங்கம் பகல் பத்து -ஐந்தாம் திருநாள்

Published:

பகல் பத்து- ஐந்தாம் திருநாள் விவரமும்.. (15-12-15)
அரங்கன் கண்டருளும்,அரையர் திருவாராதனமும் …

அரங்கனின் அத்யயனஉற்சவத்தின் ஐந்தாம் திருநாளான
இன்று,”அரையர் திருவாராதனம்” என்னும் நிகழ்ச்சி,
அனைவரும் அவசியம் காணவேண்டிய நிகழ்ச்சியாகும்.

இன்றைய தினம் “திருமாலை” 45 பாசுரங்கள்,
திருப்பள்ளியெழுச்சி 10 பாசுரங்கள்,
அமலனாதிபிரான் 10 பாசுரங்கள்,ஆக மொத்தம் 65 பாசுரங்கள், அரையர் ஸ்வாமிகளால் அரங்கன் முன்பு சேவிக்கப்படும்…

“திருமாலையில்” ” காவலிற் புலனைவைத்து” என்ற பாசுரத்திற்கும்,அமலனாதிபிரானில் முதல் பாட்டிற்கும் அபிநய வியாக்கியானங்கள் சேவிக்கப்படும்…

“திருமாலை” 1 ம் பாட்டு தொடங்கி,6 ம் பாட்டு மூன்றாம் பாதம்
“அரங்கனார்க்கு ஆட்செய்யாதே” என்ற சொற்றொடர் வரை,அபிநயம் மட்டும் நடைபெறும்.

“அரங்கனார்க்கு ஆட்செய்யாதே” என்ற பாசுர சொற்றொடரை,அரையர்கள் அபிநயித்த பிறகு, நம்பெருமாளுடைய, “திருஅத்யயனஉற்சவத்தின்”
வைபவங்கள் அனைத்தையும், புறப்பாடு, திருவாராதனம், அருளப்பாடு, வேத விண்ணப்பம் ஆகிய நிகழ்ச்சிகள்
அபிநயித்த பிறகு,மற்றைய பாசுரங்கள் சேவிக்கப்படும்.

அரங்கன் ஆலயத்தில் ஒரு நாள்முழுவதும் நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளையும்,உத்சவ காலங்களில் நம்பெருமாள்,புறப்பாடு கண்டருளுவதற்கு முன்பு நடைபெறும் நிகழ்ச்சிகளையும், அரையர்கள் தங்களின் தாளமான “நாதமுனிகளையே” நம்பெருமாளாகப் பாவித்து ,இந்த நிகழச்சியை நடத்துவார்கள்..

ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

நாடகக்கலை மூலம்,நிகழ்ச்சிகளை விவரித்திட, இயல்,இசை,நாடகம் ஆகிய முத்தமிழின் வல்லுனர்களான, அரங்கன் ஆலய அரையர் ஸ்வாமிகளைக் கொண்டு,
அடியார்கள் அனைவரும் கண்டுகளித்திட,
ஏற்படுத்தப் பட்ட சிறப்பு மிக்க திருவிழாவாகும்….

திருப்பள்ளியெழுச்சி பாசுரங்களில் எந்த பாசுரங்களுக்கும் அபிநயமோ அல்லது விரிவுரையோ சேவிக்கப்படுவது இல்லை..
“தொண்டரடிப்பொடி ஆழ்வார்”சந்நிதியில் இருந்து,அரையர் ஸ்வாமிகளுக்கு இன்று மரியாதை செய்விக்கப்படும்…

பிறகு வழக்கம் போல்,இன்று மாலை நம்பெருமாள்,”அர்ஜுன மண்டபத்தில்”(பகல்பத்து மண்டபத்தில்) இருந்து,புறப்பாடு கண்டருளி, மேலைப்படி வழியாக,சந்தனமண்டபத்திற்கு எழுந்தருளிய பிறகு,”திருமடைப்பள்ளியில்”இருந்து
“தாஸிகள்” “தட்டி”எனப்படும்,தடித்த திரிகளினால் இரண்டு,
தீபத்தினைக் கொண்டு வருவார்கள்.1953 ம் ஆண்டு
தாஸிகள் ஒழிப்புச்சட்டம் வந்தபிறகு,கோயிலில் தாஸிகள் கைங்கர்யம் நிறுத்தப்பட்டது..ஆதலால் தற்பொழுது ஆலய கைங்கர்ய பரர்களே “தட்டி”தீபம் கொண்டு வருகிறார்கள்..

இதன்பிறகு, ஸ்தாநீகர் “பெரிய கோயில்நம்பி” என்று
அருளப்பாடு சாதிப்பார்.அப்போது “திருவரங்கத்தமுதனார்” வம்சத்தில் வந்தவர்கள், முன்னே வந்து,நம்பெருமாளுக்கு “திருவந்திக்காப்பு கட்டியம்” சொல்லுவார்கள்.

(இந்த அருளப்பாடு தற்பொழுது இல்லை,,பல ஆண்டுகளாக
இந்த “திருவரங்கத்தமுதனார்” வம்சத்தில் வந்தவர்கள், திருக்கோயிலில் தங்களின் கைங்கர்யங்களை விட்டுவிட்டு, வேறுபணிகளுக்கு சென்றதால் தற்பொழுது இல்லை என சொல்லப்படுகிறது)

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

பிறகு “மங்கள வாத்தியம்”என்று ஸ்தாநீகர் அருளப்பாடு சாதித்ததும்,நட்டு முட்டு வாத்தியங்கள் முழங்கும்,கடதீபம் ஏற்றப்பட்டு கீழே வைக்கப்படும்.

“ஸாமா நாயிந்தே ஸாமா”என்று ஸ்தாநீகர் சொல்ல,அதற்கு வைஷ்ணவன்”பேசாதே சத்து”(பேசாதே ..சப்தமிடாதே என்ற பொருளில்) என்று சாதிப்பார்கள்…

பிறகு அர்ச்சகர் பெருமாளுக்கு,அர்க்யம்,பாத்யம் சமர்ப்பித்து,
“திருவடி விளக்குவதேல்” என்று ஸ்தாநீகர் சொன்னதும், உட்சாத்தினால் (அர்ச்சகரின் தோளில் இருக்கும் வஸ்த்ரம்) நம்பெருமாளின்,”திருமுகத்தையும்,திருவடியையும்”
துடைத்து விடுவர்..

பிறகு ஸ்தாநீகர் “திருமணி பரிமாறுவான்” என்றதும்,கீழே வைக்கப்பட்ட “கடதீபத்தினால்” திருவந்திக்காப்பு(ஆரத்தி)
ஆகும்.பிறகு நம்பெருமாள்,ஸர்ப்ப கதியில் , கர்ப்ப க்ருஹத்திற்கு எழுந்தருளுவார்….

 

கட்டுரை: ஶ்ரீரங்கம் மாலு

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img