IPL 2022: மும்பை Vs ஹைதராபாத்

ipl 2022 - 2026

ஐ.பி.எல் மே 17, 2022 – மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
– K. V. பாலசுப்பிரமணியன் –

நேற்று, ஐபிஎல்லின் 65ஆவது ஆட்டம் மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் மும்பை, சன்ரைசர்ஸ் அணிகளுக்கிடையே நடந்தது.

சன்ரைசர்ஸ் அணி (193/6, ராகுல் திரிபாதி 76, பிரியம் கர்க் 42, பூரன் 38, ரமன்தீப் சிங் 3/20) மும்பை அணியை (190/7, ரோஹித் 48, இஷான் 43, டிம் டேவிட் 46, உம்ரான் மாலிக் 3/23) 3 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. எனவே சன்ரைசர்ஸ் அணி மட்டையாட வந்தது. சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா மூன்றாவது ஓவரின் நான்காவது பந்தில் 9 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் பிரியம் கர்க் (26 பந்துகள் 42 ரன், 2 சிக்சர், 4 ஃபோர்), ராகுல் திரிபாதி (44 பந்துகள் 76 ரன், 3 சிக்சர், 9 ஃபோர்) நிக்கோலஸ் பூரன் (22 பந்துகள் 38 ரன், 3 சிக்சர், 2 போர்) நன்றாக விளையாடினர். ராகுல் திரிபாதி 17.2ஆவது ஓவரில், நான்காவதாக ஆட்டமிழந்தார்; அப்போது அணியின் ஸ்கோர் 174/4. அதற்குப் பின்னர் ஆட வந்த மர்கரம் (2 ரன்), கேன் வில்லியம்சன் (8 ரன்), வாஷிங்டன் சுந்தர் (9 ரன்) ஆகியொரை கட்டுப்படுத்தும் விதமாக மும்பை அணி பந்து வீசியதால் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் ஆறு விக்கட் இழப்பிறகு 193 ரன் எடுத்தது.

இந்தக் கடினமான இலக்கை அடைய ஆடவந்த மும்பை அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் ஷர்மாவும் இஷான் கிஷனும் சிறப்பாக விளையாடினர்.

ரோஹித் 10.4ஆவது ஓவரில் 48 ரன்னிற்கு அவுட் ஆனார். இஷான் அடுத்த ஓவரில் 43 ரன்னிற்கு ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 101/2. அதன் பின்னர் டேனியல் சாம்ஸ் (11 பந்துகளில் 15 ரன்), திலக் வர்மா (9 பந்துகளில் 8 ரன்) எடுத்ததால் ரன்ரேட் குறையத் தொடங்கியது.

ஸ்டப்ஸ் துரதிர்ஷ்டவசமாக ஒரு ரன் அவுட்டில் ஆட்டமிழந்தார். டிம் டேவிட் அடித்த ஒரு பந்து பந்துவீச்சாளராகிய புவனேஷ்குமார் கையில் பட்டு எதிர்தரப்பு ஸ்ட்ம்பில் பட்டுவிட்டது. இதனால் ஸ்டப்ஸ் ஆட்டமிழந்தார். அப்போது 18 பந்துகளில் 45 ரன் அடிக்கவேண்டிய நிலை.

நடராஜன் வீசிய அந்த 17ஆவது ஓவரில் டிம் டேவிட் நாலு சிக்சர் அடித்தார். ஆனால் கடைசி பந்தில் அவசரப்பட்டு ரன் அவுட் ஆனார். அப்போது மும்பை அணிக்கு 12 பந்துகளில் 19 ரன்கள் எடுக்கவேண்டியிருந்தது. 19ஆவது ஓவரை புவனேஷ்குமார் ஒரு மெய்டனாக வீசி, ஒரு விக்கட்டையும் எடுத்தார். எனவே கடைசி ஓவரில் 19 ரன் எடுக்கவேண்டியிருந்தது.

ஆனால் மும்பை வீரர்களால் 15 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே மும்பை அணி தோவியைத் தழுவியது.ராகுல் திரிபாதி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories