December 5, 2025, 3:40 PM
27.9 C
Chennai

வெறிச்சோடிய சபரிமலை சந்நிதானம்; பாஜக., பிரமாண்ட பேரணி

பத்தனம்திட்டை: சபரிமலை சந்நிதிதானம் ஐப்பசி மாதப் பிறப்பு பூஜையை ஒட்டி, 5  நாட்களுக்குத் திறக்கப் பட்டுள்ளது. நடை நேற்று திறக்கப் பட்டதை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வழக்கமாக பக்தர்கள் அதிக அளவில் வருவர். ஆனால் இந்த முறை கூட்டம் வெகுவாகக் குறைந்தே காணப்பட்டது.

சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியதை அடுத்து, அதை எப்படியாவது நடைமுறைப் படுத்த வேண்டும் என்று கங்கனம் கட்டிக் கொண்டு மாநில அரசு முயற்சி செய்து வருகிறது. குறிப்பாக, எதிர்ப்பாளர்களை அடக்கவும் அடிக்கவும், போலீஸ் பலம் கொண்டு முயன்று வருகிறது.

இந்நிலையில் நேற்று பம்பையிலும், நிலக்கல்லிலும் நடைபெற்ற தடியடி தகராறுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் பேரணியில் பலர் கலந்து கொண்டனர்.

ஏற்கெனவே கடந்த மாதம் பெய்த மழை வெள்ளத்தில் பம்பை நதி உருக்குலைந்து கிடக்கிறது. எனவே உடனே பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என்று சொன்னது தேவஸ்வம் போர்டும் மாநில அரசும்.

ஆனால் அந்த நிலைமை சீரடைவதற்குள், பெண்களை எப்படியாவது சபரிமலை கோயிலுக்குள் அனுப்பி, ஆலய நம்பிக்கைகளை சீர்குலைக்க வேண்டும் என்று அடம் பிடித்து வருகிறது கேரள கம்யூனிஸ்ட் அரசு.

இத்தகைய போக்குகளாலும், 144 தடை உத்தரவு பிறப்பித்து அரசு மேற்கொண்ட கெடுபிடிகளாலும், சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் மீது தடியடி நடத்தி காட்டுமிராண்டித்தனத்தை போலீஸார் வெளிப்படுத்துவதாலும், பக்தர்கள் அதிக அளவில் செல்லவில்லை. இதனால் வெறும் ஐநூறு பேர் மட்டுமே தரிசனத்துக்கு இருந்ததாக பக்தர்கள் தெரிவித்தனர். அதே நேரம், போலீஸார் மட்டுமே கூடுதலாக பணியில் அமர்த்தப் பட்டு, சபரிமலை சந்நிதியைச் சுற்றிலும் அமர்ந்திருப்பதாக கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories