பாலியல் வழக்கில் சிக்கிய சாமியார் காலமானார்

1947ல் திபெத்தில் பிறந்த இவர், பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஒப்பீட்டு மதம் குறித்த ஆய்வு படிப்பை முடித்தவர்.

திபெத்திய வாழ்க்கை மற்றும் இறப்பு என்ற புத்தகத்தை இவர் எழுதினார். இந்தப் புத்தகம் 30 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்று சாதனை படைத்தது. இந்த நூலின் ஒலிப்பேழையும் விற்பனையில் சாதனைப் படைத்தது.

இதனைத் தொடர்ந்து இவரை ஆயிரக்கணக்கானோர் பின்தொடர ஆரம்பித்தனர். முகநூல், காணொளிகளில் இவரது சொற்பொழிவுகள் பிரபலமாயின. உலகெங்கும் 23 நாடுகளில் இவருக்கு ஆதரவாளர்கள் பெருகினர்.

இவருடைய சீடர்கள், சோங்யாலை 13வது தலாய் லாமா குருவின் மறுபிறவி என்று நம்பி வந்தனர். இவருடைய புகழும் பரவியது. இந்நிலையில், கடந்த 1994ம் ஆண்டு பெண் சீடர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறினார். நீதிமன்றத்திற்கு வெளியே இந்த வழக்கினை சோங்யால் தீர்த்துக் கொண்டார்.

இதன்தொடர்ச்சியாக பல இளம்பெண்கள் சோங்யால் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுக்கினர். ஆதாரம் இல்லாததால் சோங்யாலுக்கு எந்தவித தண்டனையும் கிடைக்கவில்லை.

ஆனால், புத்த விசாரணை ஆணையம் சோங்யாலுக்கு எதிராக விசாரணையைத் தொடங்கியது. பல்வேறு புகார்கள் உண்மை என்ற போதும், குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்படவில்லை. இது ஒருபக்கம் இருக்க, சோங்யாலுக்கு ஆதரவாளர்கள் பெருகி அவர் பிரபலமான புத்ததுறவியாக அடையாளம் காணப்பட்டார்.

எழுத்தாளர் மேரி ஃபின்னிகன் என்பவர், திபெத்திய பௌத்த மதத்தில் பாலியல் மற்றும் வன்முறை என்ற ஆய்வு புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், புத்ததுறவி சோங்யாலை ஒரு கவர்ச்சியான, இரக்கமற்ற தலைவர் என்று எழுதினார். இதனடிப்படையிலும் சோங்யால் பரபரப்பாக பேசப்பட்டவர்.

இவ்வாறாக சர்ச்சையின் நெருங்கிய நண்பராக இருந்த சோங்யால் தாய்லாந்தில் நேற்று காலமானார். அவருக்கு புற்றுநோய் இருந்ததாகவும் அதன்காரணமாக அவர் இறந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories