பாலியல் வழக்கில் சிக்கிய சாமியார் காலமானார்

1947ல் திபெத்தில் பிறந்த இவர், பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஒப்பீட்டு மதம் குறித்த ஆய்வு படிப்பை முடித்தவர்.

திபெத்திய வாழ்க்கை மற்றும் இறப்பு என்ற புத்தகத்தை இவர் எழுதினார். இந்தப் புத்தகம் 30 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்று சாதனை படைத்தது. இந்த நூலின் ஒலிப்பேழையும் விற்பனையில் சாதனைப் படைத்தது.

இதனைத் தொடர்ந்து இவரை ஆயிரக்கணக்கானோர் பின்தொடர ஆரம்பித்தனர். முகநூல், காணொளிகளில் இவரது சொற்பொழிவுகள் பிரபலமாயின. உலகெங்கும் 23 நாடுகளில் இவருக்கு ஆதரவாளர்கள் பெருகினர்.

இவருடைய சீடர்கள், சோங்யாலை 13வது தலாய் லாமா குருவின் மறுபிறவி என்று நம்பி வந்தனர். இவருடைய புகழும் பரவியது. இந்நிலையில், கடந்த 1994ம் ஆண்டு பெண் சீடர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறினார். நீதிமன்றத்திற்கு வெளியே இந்த வழக்கினை சோங்யால் தீர்த்துக் கொண்டார்.

இதன்தொடர்ச்சியாக பல இளம்பெண்கள் சோங்யால் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுக்கினர். ஆதாரம் இல்லாததால் சோங்யாலுக்கு எந்தவித தண்டனையும் கிடைக்கவில்லை.

ALSO READ:  ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

ஆனால், புத்த விசாரணை ஆணையம் சோங்யாலுக்கு எதிராக விசாரணையைத் தொடங்கியது. பல்வேறு புகார்கள் உண்மை என்ற போதும், குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்படவில்லை. இது ஒருபக்கம் இருக்க, சோங்யாலுக்கு ஆதரவாளர்கள் பெருகி அவர் பிரபலமான புத்ததுறவியாக அடையாளம் காணப்பட்டார்.

எழுத்தாளர் மேரி ஃபின்னிகன் என்பவர், திபெத்திய பௌத்த மதத்தில் பாலியல் மற்றும் வன்முறை என்ற ஆய்வு புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், புத்ததுறவி சோங்யாலை ஒரு கவர்ச்சியான, இரக்கமற்ற தலைவர் என்று எழுதினார். இதனடிப்படையிலும் சோங்யால் பரபரப்பாக பேசப்பட்டவர்.

இவ்வாறாக சர்ச்சையின் நெருங்கிய நண்பராக இருந்த சோங்யால் தாய்லாந்தில் நேற்று காலமானார். அவருக்கு புற்றுநோய் இருந்ததாகவும் அதன்காரணமாக அவர் இறந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories