ஆடையை பறக்கவிட்டு ஆண்ட்ரியா எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கண்ட நாள் முதல் – திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை ஆண்ட்ரியா குறைந்த கால இடைவெளியில் பிரபலம் அடைந்தார். அடுத்தடுத்து இவர் நடித்த படங்கள் வெற்றி பெற்று இவருக்கு நல்ல பெயரையும் பெற்றுத் தந்தது. தமிழில் மட்டுமல்லாமல், மலையாளம், இந்தி, தெலுங்கு என வேற்று மொழிப் படங்களிலும் கலக்கினார்.
இடையில் அரசியல் ரீதியில் கிசுகிசுக்கப் பட்டார். இவர் குறித்து அரசியல் ரீதியாக வரும் செய்திகளை அறிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டினர்.
வழக்கமாக பல்வேறு நடிகைகளும் செய்வதைப் போல், தனது புகைப்படங்களை இணையதள பக்கத்தில் பதிவிடுவதை இவரும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அவ்வப்போது சில கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றுவார்.
தற்போதும் தனது அட்டகாசமான புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஒரு படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் காற்றில் ஆடை பறக்க, ஆண்ட்ரியா இயற்கையை ரசிப்பது போல் இருக்கும் படம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.