சென்னை: விஜயதசமி விடுமுறை நாளான நாளை பள்ளிகளைத் திறக்க வேண்டும் பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித் துறை இது குறித்து உத்தரவிட்டுள்ளது.
தற்போது விஜய தசமிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால், விஜய தசமி நாளில் படிப்பு, கல்வியைத் தொடங்குவது மரபு என்பதால், நாளை பள்ளிகளை திறந்து மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத் தக்கது.