வெனிஸ்வேலா நாட்டு சாவேஸ்சம் , அகில உலக பொருளாதார மேதை மன்மோகன் சிங்கும் :-
தென் அமெரிக்க நாடான வெனிஸ்வேலா, தரையில் காலால் கீறினால் பெட்ரோல் ஊற்று எடுக்கும் அபிரிமிதமான எண்ணை வளம் கொண்ட நாடு .
சாவோஸ்:-
ஒரு மில்லிடரி அதிகாரி, 1992 இல் ஒரு ராணுவ கவிழிப்பு நடத்தி வெற்றி கொள்ளாமல் , வார்த்தை ஜாலங்களால் 1998 இல் ஜானதிபதி ஆனார் .
2000 ஆண்டில் ஆயில் நூறு டாலருக்கு மேல் விற்ற நேரம் , நாட்டின் ஒரே உற்பத்தி பெட்ரோல் , 95% வருமானம் , அதை தயாரித்து குடுத்தவை அமெரிக்க ஆயில் கம்பெனிகள் .
சோசிலிச சமுதாய பார்வை , வேலை செய்யாமல் எல்லாருக்கும் பணம் , பொருள்கள் உணவு எல்லாம் அரசாங்கம் சொன்ன விலைக்கு விற்க கட்டயப்படுதப்பட்டன .
உணவு , பின் வரை எல்லாம் நிறைய இருந்த பெட்ரோல் டாலர் கொண்டு வாங்கப்பட்டன , எல்லாருக்கும் ஆயில் கம்பெனியில் வேலை என்று சொல்லி அனைத்து ஆயில் கம்பனிகளையும் அரசுடமை ஆக்கி , பொன் வாத்தை அறுத்த கதையாக …
பெட்ரோல் விலை $30-40 வீழ்ந்து .. இன்று அந்த நாட்டின் 25% மக்கள் நாட்டை விட்டு ஓடி விட்டனர் , மற்றவர்கள் ரோடில் பசியோடு அலைகிறார்கள்.
விசயம் .. என்ன வளம் இல்லை இந்த நாட்டில் என்று இருந்தாலும் , ஓசியில் தின்னும் படி மக்களை மாற்றினால் .. பிச்சை எடுக்கத்தான் வேண்டும் .
மன்மோகன் சிங் :-
கந்து வட்டிக்கு வாங்கி தினமும் மகனுக்கு வடை பாயச சாப்பாடு போட்டு விட்டு அப்பன் செத்து போனால் (ஆட்சியை விட்டு போனால்) மகன் கடன்காரனிடம் அடிபட்டு கோமணம் இல்லாமல் அம்மணமாக தெருவில் அலைவான் என்று 11 வகுப்பில் மட்டும் பொருளாதாரம் படித்த எனக்கே தெரிஞ்ச விசயம் இந்த மனுஷனுக்கு தெரியவில்லை ..
1. உழைக்காமல் மக்களுக்கு பணம் …நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டம் … விவசாய பண்ணை வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் , பல இடங்களில் தரிசான நிலங்கள் !!!
2. பெட்ரோல் வாங்கிய நாடுகளுக்கு சுமார் 2,50,000 கோடி ரூபாய் கடன் பாக்கி , கந்து வட்டிக்கு வாங்கி பிள்ளைக்கு பாயசம் !!
3. இதை தாண்டி சுமார் 1,00,000 கோடி ரூபாய் பெட்ரோல் மானியம் , விலையை குறைத்து காட்ட … அதற்காக வெளியில் சொல்லாமல் நிறைய ரூபாய் நோட்டுக்களை அடிச்சு புழங்க விட்டது ..
ஆ பெட்ரோல் விலையை குறை …. அதை GST 28% க்குள் கொண்டு செல் என்று எல்லாரும் இன்று சவுண்ட் விடுகிறார்கள் ..
தமிழக அரசு மாதிரி எல்லா மாநில அரசுகளுக்கும் வருமானம் இந்த பெட்ரோல் விற்பனைதான் .. வரி ஆம் 100% ..
எல்லா மாநில அரசுகளும் நிறைய ஓசி பொருள்களை குடுத்து மூன்று நான்கு லக்ஷம் கோடி ரூபாய் கடனில் இருக்கும் பொது இந்த வரி விதிப்பை குறைக்க மாட்டார்கள் ..
இதை தவிர பல ஆயிரம் சம்பளம் வாங்கும் பல லக்ஷம் அரசு அதிகார வர்கத்தின் 70% மொத்த அரசு வருமானத்தில் விழுங்கி நிற்க …
பெட்ரோல் Rs.120/- அதை எற்றுகொள்ளதான் வேண்டும் ,
காரணம் மக்கள் .. அப்பனிடம் காசு இல்லாதபோதும் தினமும் பாயசம் நக்கி சாப்பிட்டு பழகி விட்டோம் …
விஜயராகவன் கிருஷ்ணன்


