வந்தே மாதரம்; சர்ச்சைக்கு உரியவர்கள் சர்ச்சை ஆக்குகிறார்கள்!

joseph vijay oath taking ceremony in chennai - 2026

நேற்று நடைபெற்ற தமிழ்நாடு அரசு பதவியேற்பு விழாவின் தொடக்கத்தில் மூன்று பாடல்கள் இசைக்கப்பட்டது மிக அருமையாக இருந்தது. வந்தே மாதரம் (தேசியப் பாடல்), ஜனகணமன (தேசிய கீதம்), நீராரும் கடலுடுத்த (தமிழ்த்தாய் வாழ்த்து) என்ற அந்த வரிசையும் மிகச் சரியானது. அனாவசியமாக இதைக் குறித்து வேண்டாத பிரசினையைக் கிளப்பி, பதவியேற்பு விழாவில் ஏதோ பெரிய “அபசாரம்” நடந்து விட்டது என்ற ரீதியில் கூச்சலிடும் இரண்டு-எம்.எல்.ஏ சில்லறைக் கட்சிகளின் அற்பத் தனமான எதிர்ப்புகளை எல்லாம் உண்மையில் முதல்வர் விஜய் அரசு பொருட்படுத்தத் தேவையே இல்லை.

ஆனாலும், இதை ஏதோ ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டு, “கவர்னர் தரப்பில் மத்திய அரசின் நெறிமுறைகள் வலியுறுத்தப்பட்டு இது நடந்தது. மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப் படுவதில் தமிழக அரசுக்கு உடன்பாடில்லை. இனி இந்தப் புதிய நடைமுறை பின்பற்றப்படாது” என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஒரு விளக்கத்தை அளித்திருக்கிறார். இதற்கு எந்த அவசியமும் இல்லை.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

முதலில் தேசம், அதற்குப் பின்பு தான் மொழி, மாநிலம் எல்லாம். நீங்கள் எடுத்துக் கொண்ட உறுதிமொழியில் கூட இந்தியா தான் முதலில் வந்தது. அதன்பிறகு தான் “தமிழ்நாட்டின்” என்று வந்தது. அதே வரிசை தான் பாடலிலும் பின்பற்றப் பட்டது.

“தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு நூற்றாண்டு கடந்த பெருமிதம் உள்ளது” என்கிறார் அமைச்சர். வந்தே மாதரம் பாடலுக்கு அதற்கும் முந்தைய, அதைவிடவும் பெரிய தேசியப் பெருமிதமும் பாரம்பரியமும் உள்ளது என்பதை மறந்துவிட வேண்டாம். சமீபத்தில் தான் வந்தே மாதரம் 150வது ஆண்டு விழா கொண்டாடப் பட்டது.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின் அமைப்பே எப்படி இருக்கிறது? அது “நிலமடந்தை” என்று முதலில் பூமித்தாயைக் கூறுகிறது. “வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்” என்று இரண்டாவதாக பாரத நாட்டை அவளது திருமுகம் என்கிறது. மூன்றாவதாகத் தான் “தக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்” என்று தமிழ்நாட்டை அவளது திருநெற்றியாகவும், நான்காவதாக “தரித்த நறும் திலகமுமே” என்று தமிழ்மொழியை அவளது நெற்றித் திலகமாகவும் கூறுகிறது. எனவே, விழாவில் பாடல்கள் பாடப்பட்ட வரிசையும் இதை ஒட்டியே தான் அமைந்திருந்தது. இதற்கு மாறாக அல்ல.

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

உண்மையில் வந்தே மாதரம், தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. இரண்டு பாடல்களுமே வாழும் நிலப்பரப்பையும் அது சார்ந்த பண்பாட்டுக் கூறுகளையும் தாயாக, தேவியாக உருவகிக்கின்றன. “மாதா பூமி: புத்ரோஹம் ப்ருதிவ்யா” என்ற வேதரிஷியின் பிரகடனத்தின் எதிரொலிகள் தான் இந்த இரண்டு பாடல்களும் என்பதை உணரவேண்டும்.

வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திரு நாடு
வந்தே மாதரம் வந்தே மாதரம்

என்ற பாரதியாரின் மகத்தான வரிகளில், வரிசை தமிழிலிருந்து தொடங்கி பாரதத்திற்குச் செல்கிறது. ஆனாலும், உணர்வு ஒன்றுதான்.

இருபெரும் திராவிடக் கழகங்களை தேர்தலில் வீழ்த்தி ஆட்சி அமைத்துள்ள த.வெ.க இந்த உணர்வைப் பின்பற்றி ஆட்சி செய்யவேண்டும், மத்திய மாநில உறவுகளைப் பேணவேண்டும் என்பதே அதற்கு வாக்களித்த பெருவாரியான தமிழ்நாட்டு மக்களின் அவா. திராவிட இயக்கத்தின் பிரிவினைவாதப் பிசாசுகள் ஒழிந்ததாகவே இருக்கட்டும். அவற்றை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டாம்.

  • ஜடாயு, பெங்களூரு
ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

Topics

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Entertainment News

Popular Categories