கண்நோய்
தாய்ப்பாலில் குங்குமப்பூவை அரைத்து இரண்டு சொட்டுகள் வீதம் கண்களில்விட கண் தொடர்பான நோய்கள் அனைத்தும் குணமாகும்.
கண்சிவப்பு மாற
பெண்கள், அடிக்கடி மல்லிகைப்பூனவ சூடிக்கொண்டால் கண்ணின் சிவப்புமாறும்.
ஆண்கள் கண்களில் இரண்டு சொட்டுவீதம் பன்னீரை விட்டுக் கொண்டால் கண் சிவப்பு அகலும்.
கண் அழற்சி, கண்வலி
சீரகம், வெங்காயம், குறிஞ்சி இலை இம்மூன்றையும் இடித்து உமிழ்நீருடன் சேர்த்து மெல்லிய துணியில் வைத்துக்கட்ட வேண்டும். அதில் இரண்டு, மூன்று சொட்டுகள் வீதம் கண்கள் இரண்டிலும் இட்டுவர கண்வலிகள், கண் அழற்சி முதலியவை குணமாகும்.
கண்நோய் அகல
கோழி முட்டையை அவித்து சரிபாகமாகத்துண்டித்து கண்களின் மேல் வைத்துக் கட்டி படுத்துறங்க கண்கள் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
மாலைக்கண் நோய்
நல்ல தளிரான துளசி இலையைத் தண்ணீரில் கழுவி சுத்தமாக்கி, கசக்கிச் ‘சாறெடுக்க வேண்டும். தினமும் அதிகாலை நேரத்தில் இருதுளிகள் வீதம் கண்களில் இட்டுவர மூன்றே நாட்களில் மாலைக்கண் நோய் அகலும்.
கண்ணாடி போடாமல் கண் பார்வை தெரிய
ஆட்டுப்பால், வெள்ளை மிளகு, வெள்ளை அருகம்புல்லின் சாறு இம்மூன்றையும் தலையில் தேய்த்து வர 40 வயதைத் தாண்டியவர்கள் தங்கள் கண்களுக்கு கண்ணாடிபோடத்தேவையில்லை. கண்களின் பார்வை அதிகரிக்கும்.