இளம்பெண் கடத்தல்! 9 பேர் காரில் வைத்து வன்கொடுமை!

vankodumai 1 - 2026

இளம் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, ரோட்டில் வீசிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திரிபுரா மாநிலம் அகர்தாலாவில் உள்ள படர்காட் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவர், உடல் நலமில்லாத மகளை மருத்துவமனையில் சேர்த்திருந்தார். அவரை பார்த்துவிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணியளவில் ஆட்டோ ரிக்‌ஷாவில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்,

ரிக்‌ஷாகாரர் அந்தப் பெண்ணுக்குத் தெரிந்தவர். இந்நிலையில் வழக்கமான வழியை விட்டுவிட்டு, ரிக்‌ஷா வேறு வழியில் சென்றதால், சந்தேகமடைந்த அந்தப் பெண், வண்டியை நிறுத்துமாறு கூறியுள்ளார்..

வழக்கமாகச் செல்லும் சாலையில் ஏதோ பிரச்னை என்பதால் இந்த வழியில் போவதாகக் கூறியுள்ளார் ரிக்‌ஷாக்காரர். சிறிது தூரம் சென்றதும் நான்கைந்து பேர் அதில் ஏறினர். அவர்கள் அந்தப் பெண்ணின் வாயை பொத்தி, கையை கட்டினர்.

vankodumai 3 - 2026

பின்னர் மற்றொரு வாகனத்துக்கு கடத்தினர். அந்த வாகனம் நர்சிங்கார் என்ற இடத்துக்குச் சென்றது. ஓடும் வாகனத்திலேயே அந்தப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். சுமார் 9 பேர் இந்த கொடுமையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. பின்னர் அவர்கள், அந்தப் பெண்ணை சாலையில் வீசிவிட்டுத் தப்பிவிட்டனர்.

நடுரோட்டில் மயங்கி கிடந்த அந்தப் பெண் பற்றி, அந்த வழியாகச் சென்றவர்கள் காவல்துறையினருக்குத் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த காவல்துறை, ஆட்டோர் ரிக்‌ஷா ஓட்டுநர் பிரதீப் தாஸ், ராதாப் தாஸ், அஜோய், உட்பட ஆறு பேரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

அகர்தாலாவில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வன்முறையை கண்டித்துள்ள எதிர்க்கட்சி பெண்கள் அமைப்புகள், குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories