இளம்பெண் கடத்தல்! 9 பேர் காரில் வைத்து வன்கொடுமை!

vankodumai 1 - 2026

இளம் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, ரோட்டில் வீசிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திரிபுரா மாநிலம் அகர்தாலாவில் உள்ள படர்காட் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவர், உடல் நலமில்லாத மகளை மருத்துவமனையில் சேர்த்திருந்தார். அவரை பார்த்துவிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணியளவில் ஆட்டோ ரிக்‌ஷாவில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்,

ரிக்‌ஷாகாரர் அந்தப் பெண்ணுக்குத் தெரிந்தவர். இந்நிலையில் வழக்கமான வழியை விட்டுவிட்டு, ரிக்‌ஷா வேறு வழியில் சென்றதால், சந்தேகமடைந்த அந்தப் பெண், வண்டியை நிறுத்துமாறு கூறியுள்ளார்..

வழக்கமாகச் செல்லும் சாலையில் ஏதோ பிரச்னை என்பதால் இந்த வழியில் போவதாகக் கூறியுள்ளார் ரிக்‌ஷாக்காரர். சிறிது தூரம் சென்றதும் நான்கைந்து பேர் அதில் ஏறினர். அவர்கள் அந்தப் பெண்ணின் வாயை பொத்தி, கையை கட்டினர்.

vankodumai 3 - 2026

பின்னர் மற்றொரு வாகனத்துக்கு கடத்தினர். அந்த வாகனம் நர்சிங்கார் என்ற இடத்துக்குச் சென்றது. ஓடும் வாகனத்திலேயே அந்தப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். சுமார் 9 பேர் இந்த கொடுமையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. பின்னர் அவர்கள், அந்தப் பெண்ணை சாலையில் வீசிவிட்டுத் தப்பிவிட்டனர்.

நடுரோட்டில் மயங்கி கிடந்த அந்தப் பெண் பற்றி, அந்த வழியாகச் சென்றவர்கள் காவல்துறையினருக்குத் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த காவல்துறை, ஆட்டோர் ரிக்‌ஷா ஓட்டுநர் பிரதீப் தாஸ், ராதாப் தாஸ், அஜோய், உட்பட ஆறு பேரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

அகர்தாலாவில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வன்முறையை கண்டித்துள்ள எதிர்க்கட்சி பெண்கள் அமைப்புகள், குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories