February 20, 2026, 11:45 AM
30 C
Chennai

500 வங்கிக் கிளைகளில் உளவு: ஊழல் அதிகாரிகளுக்கு விரைவில் ஆப்பு!

புதுதில்லி:
சுமார் 500 வங்கிக் கிளைகளில் ஸ்டிங் ஆபரேஷன் எனப்படும் உளவு மேற்கொள்ளப்பட்டதாகவும், அந்த சிடிக்கள் அனைத்தும் மத்திய நிதித்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப் பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிச.10ல் குஜராத் தீஸாவில் அமுல் நிறுவன விழாவில் பேசிய பிரதமர் மோடி, 500, 1000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெற்ற விவகாரம் என்பது, நாட்டில் இருந்து ஊழலை ஒட்டுமொத்தமாக வெளியேற்றச் செய்யும் முயற்சிதான். ஊழல்வாதிகளை நிச்சயம் தண்டிப்போம். வங்கி அதிகாரிகள் பலர் சிறைக்குப் போயிருக்கிறார்கள். அவர்கள் நினைத்தார்கள், ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மோடி திரும்பப் பெற்றுள்ளார். இந்த நேரத்தில் நாம் நம் வேலையப் பார்ப்போம் என்று பின் வாசல் வழியாக வேலை செய்தார்கள். ஆனால், மோடி அந்தப் பின்வாசலில் கேமரா மூலம் கண்காணிக்கிறார் என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் அனைவரும் கைதாவார்கள். தவறிழைத்தவர்கள் எவரும் விட்டுவைக்கப்பட மாட்டார்கள். அவர்கள் தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும்.” என்று பேசினார் பிரதமர் மோடி.

இதனிடையே ஊழல் வங்கி ஊழியர்களுக்கு கெட்ட காலம் துவங்கியுள்ளது. சுமார் 500 வங்கிக் கிளைகளில் மத்திய அரசு ஸ்டிங் ஆபரேஷன் மூலம், ரகசிய வீடியோ எடுத்துள்ளது; அந்த வீடியோ சி.டி-க்கள் இப்போது நிதி அமைச்சகத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

காவல் துறையினர், தரகர்கள், மற்றும் முக்கிய பிரமுகர்கள் தங்கள் பழைய நோட்டுக்களை வங்கி ஊழியர்களின் உதவியுடன் எவ்வாறு மாற்றினர் என்பது ஸ்டிங் சி.டி-க்களில் பதிவாகியுள்ளது,.

[embedyt] https://www.youtube.com/watch?v=TQgrBVz_pv4[/embedyt]

நவ.8ம் தேதிக்குப் பிறகான நடவடிக்கைகளில், இது வரை வங்கி ஊழியர்கள் மீதான மென்மையான நடவடிக்கையே எடுக்கப்பட்டுள்ளது. இது அரசாங்கத்தின் தந்திரங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. நாட்டில் ஓரளவு பணத்தட்டுப்பாடு தீர்ந்தவுடன், தவறிழைத்த வங்கி அதிகாரிகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப் படும் என்று கூறப்படுகிறது.

வங்கி ஊழியர்களின் ஊழல் போக்கால்தான் பொது மக்கள் இவ்வளவு அவதிக்குள்ளானார்கள்; பெரும் சிரமங்களைச் சந்தித்தார்கள் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. இந்த சிடிக்களில், பொதுமக்கள் பெரும் வரிசையில் வங்கிக்கு வெளியே காத்திருக்கும் நிலையில், வங்கி ஊழியர்கள் மற்றும் மேலாளர்கள், வெவ்வேறு விதமான ஐ.டி.,க்களில் எவ்வாறு பனத்தை கட்டுக் கட்டாக மாற்றினார்கள் என்பது பதிவாகியுள்ளது. இது வங்கி ஊழியர்களிடையே தற்போது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

[embedyt] https://www.youtube.com/watch?v=CpOJqHkFflo[/embedyt]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Topics

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

Entertainment News

Popular Categories