December 5, 2025, 6:16 PM
26.7 C
Chennai

தேர்தல் நேரத்தில் பாஜக.,வுக்கு அழுத்தம் கொடுக்கவே போராட்டம்; தமிழகம் செய்வது சரியல்ல: சீண்டும் சித்தராமையா

sidharamaiya in mysore chamundi temple - 2025

மைசூரு: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்துவது சரியில்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். மைசூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அவர், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு கூறினார்.

மைசூருவில் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, தமிழகத்தின் போராட்டத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், கர்நாடக மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக, தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் முழு அடைப்புப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன. இது சரியான அணுகுமுறை இல்லை.

காவிரி குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் ஒரு திட்டம் என்றுதான் குறிப்பிடப் பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு சாதகமாக அது ஆணை பிறப்பிக்கவில்லை. காவிரி ஆற்று நீரைப் பகிர்ந்து கொள்ளும் மாநிலங்களுக்கு இடையே தனது தீர்ப்புப்படி முறையாக நீரை பகிர்ந்து கொள்வதற்காக ஒரு செயல் திட்டத்தை வகுக்க வேண்டும் என்றுதான் அது தெரிவித்தது. ஆனால் தமிழகத்தின் இத்தகைய நெருக்கடிகளுக்கும், அழுத்தம் தரும் தந்திரத்துக்கும் இடம் கொடுக்காமல், உச்ச நீதிமன்றம் சரியான உத்தரவை பிறப்பிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்று கூறினார்.

மேலும், காவிரியுடன் நின்றுவிடாமல், மேகதாது அணையைக் கட்டும் திட்டத்தைச் செயல்படுத்துவதிலும் காங்கிரஸ் அரசு உறுதியாக உள்ளது என்று கூறினார் சித்தராமையா.

தமிழகத்தில் காவிரிப் பிரச்னை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றாக இணைந்து ஒரே நாளில் என்று திட்டமிடாவிட்டாலும், ஏதோ ஒரு வகையில் அனைவருமே தனித்தனியாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

Cauvery issue CM joins ADMK hunger strike - 2025

முன்னதாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பும் பாஜக.,வையே சாரும் என்று பழியைப் போட்டு, மாநிலத்தில் அரசியல் செய்தார் சித்தராமையா. அடுத்து காவிரி விவகாரத்தில் மக்களைத் தூண்டிவிட்டு, தாம் மட்டுமே கர்நாடகத்தின் காவிரி பாதுகாவலன் என்று காட்டிக் கொள்ள பாஜக.,வை கட்டம் கட்டினார். இப்போது, தமிழக அரசியல் கட்சிகள், கர்நாடகத் தேர்தலை முன்னிட்டு பாஜக.,வுக்கு நெருக்கடி கொடுக்க இது போல் போராட்டங்களை நடத்துவதாக கூறியிருக்கிறார்.

m k stalin dmk - 2025

தமிழகத்தில் முக்கிய எதிர்க்கட்சியான திமுக.,வுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. காவிரிப் பிரச்னையில் கர்நாடக காங்கிரஸை ஸ்டாலின் கண்டிக்க வேண்டும், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக., வெளியேற வேண்டும், கர்நாடகத்தில் உள்ள வர்த்தகத் தொடர்புகளை திமுக., விலக்கிக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் பலமாக எதிரொலித்துள்ள நிலையில், சித்தராமையாவின் இந்தப் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories