naam tamilar - 2026காவிரி மேலாண்மை வாரியத்திற்காகவும், தமிழர்களின் நலனுக்காகவும் போராடுவதாக கூறிக்கொண்டு லட்டர்பேட் கட்சியை நடத்தி வரும் நாம் தமிழர் கட்சியினர் இன்று ஐபிஎல் போட்டியை பார்க்க சிஎஸ்கே பனியனுடன் சென்றவர்களை ஓடஓட விரட்டி அடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சிஎஸ்கே ரசிகர்களை அடித்தால் காவிரி மேலாண்மை வாரியம் கிடைத்துவிடுமா? சிஎஸ்கே ரசிகர்களும் தமிழர்கள்தானே , தமிழர்களை தமிழர்களே அடிப்பதுதான் போராட்டத்தின் நோக்கமா? என்ற கேள்வி நெட்டிசன்களிடையே எழுந்துள்ளது.

வெறும் நான்கு மணி நேரம் மட்டுமே நடைபெறும் ஒரு போட்டியால் ஒரு போராட்டத்தின் வலிமை குறைந்துவிடும் என்றால் அந்த போராட்டம் அவ்வளவு பலவீனமானதா? என்ற கேள்வியையும் நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.

https://twitter.com/Joker4equality/status/983689674697814017

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending