தேர்வெழுதும் மாணவர்களுக்காக ஒரு “மன் கி பாத்” : பிரதமர் மோடி

Published:

புது தில்லி: போட்டித் தேர்வுகள், பொதுத் தேர்வுகளை எழுதவுள்ள மாணவ மாணவியருக்காக தனது பிப்ரவரி மாத வானொலி உரையான மன் கி பாத் நிகழ்ச்சியை வைத்துக் கொள்ளப் போவதாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை இன்று அறிவித்தார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் செய்தியை வெளியிட்டுள்ளார். மேலும் இது குறித்து தங்கள் அனுபவங்களை மாணவர்களும் ஆசிரியர்களும் இளம் மாணவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த அக்டோபரில் துவங்கியது பிரதமரி மன் கி பாத் வானொலி உரை நிகழ்ச்சி. மாதந்தோறும் ஒலிபரப்பான இந்த நிகழ்ச்சியில் இதுவரை, தூய்மை இந்தியா திட்டம், போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு, கருப்புப் பணம் குறித்த பேச்சு ஆகியவை இடம்பெற்றன. பிப்ரவரி மாத நிகழ்ச்சி அவருடைய 5வது வானொலி உரை நிகழ்ச்சியாகும்.

ALSO READ:  BRICS: ரஷ்ய அதிபர் புடினுக்கு மோடி அளித்த தமிழர் ‘நிர்வாகப் பொக்கிஷ’ பரிசு!

Related articles

Recent articles

spot_img