January 14, 2025, 6:31 PM
26.9 C
Chennai

இன்று முதல் ‘நாலம்பல’ தரிசனம் கேரள கோயில்களில் ஏற்பாடு

கேரளாவில் ‘ராமாயண மாதம்’ எனப்படும் ஆடி மாதத்தில் ராமர், பரதன், லட்சுமணன், சத்துருகனன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நான்கு கோயில்களில், ஒரே நாளில் தரிசனம் செய்வது புண்ணியமாக கருதப்படுகிறது. இவ்வாறு தரிசனம் செய்வது ‘நாலம்பல தரிசனம்’ என அழைக்கப்படுகிறது.

இன்று முதல் ஆகஸ்ட் 16 வரை ஒரு நாளில் இக்கோயில்களில் தரிசனம் செய்யலாம். பக்தர்களுக்காக இக்கோயில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருச்சூர் அருகே திருப்பரயாறில் ராமர் கோயில், இரிஞ்ஞாலக்குடாவில் பரதன், மூழிக்குளத்தில் லட்சுமணன், பாயம்மலில் சத்துருக்கனன் கோயிலும் உள்ளன. திருச்சூர் அருகிலேயே கோயில்கள் இருப்பதால் ஒரே நாளில் தரிசிக்க இயலும்.
இரிஞ்ஞாலக்குடா பரதன் கோயில் நிர்வாகிகள் கூறுகையில், ‘இக் கோயில் ‘கூடல் மாணிக்கம் கோயில்’ என அழைக்கப்படுகிறது.இரவு 3:00 மணிக்கு நடை திறந்து காலை 11:30 வரை; மாலை 5:00 முதல் இரவு 8:00 வரை திறந்திருக்கும். வயிறு பிரச்னை உள்ளவர்கள் கத்தரிக்காய் நிவேத்யம் செய்து வழிபட்டால் குணமாகும் என்பது நம்பிக்கை. தமிழக பக்தர்கள் பெருமளவில் இங்கு வருகின்றனர்.
விபரங்களுக்கு 0480 -282 6631ல் தொடர்பு கொள்ளலாம்’ என்றனர்.

ALSO READ:  என்.எஸ்.எஸ். மாணவர்கள் சார்பில் கல்லூரியில் சித்த மருத்துவ முகாம்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முட்டாள்தனமான முதலாளித்துவம்!

இவ்விதம் நன்றி பாராட்டுவது நம் பாரம்பரியம். முதலாளிமார்களே, உங்களுக்குத் தொழிலாளிகளே அத்தகைய தெய்வம். அவர்களுக்கு நல்லது செய்ய முடியாவிட்டாலும்

பஞ்சாங்கம் ஜன.14- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பிரதமர், ஆளுநர் தமிழில் பொங்கல் வாழ்த்து!

பல தொழில் செய்து சுழலும் இவ்வுலகத்தில் ஏர்ப்பிடிக்கும் தொழிலை பின்பற்றி தான் உலகம் சுற்ற வேண்டியிருக்கிறது என்பது வள்ளுவன் வாக்கு.

தேவகோட்டை பள்ளியில் தேசிய இளைஞர் தினம் போட்டிகள்!

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய இளைஞர் தின விழாவினையொட்டி நடைபெற்ற ஓவியம் வரைதல் மற்றும் விவேகானந்தரின்

மதுரை கோயில்களில் திருவாதிரை ஆருத்ரா தரிசனம்!

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராசருக்கு சிறப்பு பூஜைகள் அதிகாலை நடைபெற்றது.