February 21, 2026, 3:38 AM
25.6 C
Chennai

கேரள வெள்ள நிவராண தொகையாக ரூ. 80 கோடி ஒதுக்கீடு

07 July23 Kerala - 2026கேரள மாநிலத்தில் வரலாறு காணாத அளவுக்கு பலத்த மழை பெய்து வருவதால் ஏற்பட்டுள்ள பெரும் சேதத்தை ஈடுபட்ட மத்திய அரசிடம் அம்மாநில அரசு 1000 கோடி ரூபாய் நிவாரண உதவித் தொகை கேட்டிருந்த நிலையில் மத்தய அரசு தற்போது வெறும் 80 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது.

கேரளாவில் கடந்த சில வாரங்களாகத் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் வெள்ள நீர் தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கிறது. ஏராளமான வீடுகள் மூழ்கின. பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கனமழைக்கு இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

பலரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. பல லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கேரள மாநில நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசிடம் ரூ.1000 கோடி கேட்கப்பட்டது. இதுதொடர்பாக கேரள விவசாயத்துறை அமைச்சர் வி.எஸ்.சுனில்குமார் 1000 கோடி ரூபாய்க்கான அறிக்கையை தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்.

இதில் விவசாயத்திற்காக மட்டும் ரூ.200 கோடி நிவாரணம் கேட்கப்பட்டது. இந்நிலையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, கேரளாவில் ஆலப்புழா, எர்ணாகுளம், கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார்.

இதையடுத்து ரூ.80 கோடியை மத்திய அரசு நிவாரணமாக கேரளாவிற்கு அளித்தார். இது முதல்கட்டம் என்றும், மீண்டும் நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் கூறிச் சென்றார்.

ஆனாலும் கேரளாவில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் வெறும் 80 கோடி ரூபாய் மட்டும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்திருப்பது கேரள அரசையும், பொது மக்களையும் அதிருப்தி அடையச் செய்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories