செல்லூர் ராஜுவை பேசவிட்டால் மதுரை கவலையின்றி முன்னுக்கு வந்துவிடும்: ராமதாஸ் கிண்டல்!

07 June18 Ramadoss - 2026

கவலையின்றி வாழ்வதற்கு ஏற்ற நகரங்கள் பட்டியலில் மதுரைக்கு பின்னடைவு. 28-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது: செய்தி

– அமைச்சர் செல்லூர் ராஜு இருந்துமா இந்த நிலை. இனி அவரை கொஞ்சம் அதிகம் பேச வைத்து கவலையை மறக்க வைப்பீராக! – என்று கிண்டல் அடித்துள்ளார் ராமதாஸ்.

இது குறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் இவ்வாறு கூறியுள்ளார்.

பாமக., நிறுவுனர் ராமதாஸ் தனது  டிவிட்டர் பதிவில், கவலையின்றி வாழ்வதற்கு ஏற்ற நகரங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், மதுரைக்கு பின்னடைவு ஏற்பட்டது குறித்து இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மத்திய அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள மக்கள் எளிதாக வாழ்க்கை நடத்துவதற்கு வசதியான நகரங்கள் பட்டியலில், மஹாராஷ்டிராவில் உள்ள புனே, நவி மும்பை, மும்பை ஆகிய நகரங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில் தமிழகத்தில் திருச்சி 12வது இடத்தையும், சென்னை 14வது இடத்தையும் பிடித்துள்ளன. அந்த வகையில், தமிழகத்தில் கவலையின்றி வாழ்க்கை நடத்துதற்கு ஏற்ற நகரங்கள் பட்டியலில் திருச்சியே முதலிடம் பிடித்துள்ளது.

நாட்டின் முக்கிய நகரங்களில் நிலவும் நிர்வாகம், சமூக, பொருளாதார, அடிப்படை கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில், மக்கள் எளிதாக வாழத் தகுந்த நகரங்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்தப் பட்டியலை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நேற்று வெளியிட்டார்.

இந்தப் பட்டியலில் முதல் மூன்று இடத்தில் புனே, நவி மும்பை, மும்பை ஆகிய நகரங்கள் பிடித்தன. ஆந்திர மாநிலம் திருப்பதி, பஞ்சாப் மாநிலம் சண்டிகர், மஹாராஷ்டிர மாநிலம் தானே ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

தமிழக நகரங்கள் முறையே திருச்சி 12; சென்னை 14; கோவை 25; ஈரோடு 26; மதுரை 28, திருப்பூர் 29 ஆகிய இடங்களை பிடித்துள்ளன.

இந்தப் பட்டியலில் நாட்டின் தலைநகர் புதுதில்லி 65 ஆவது இடத்தை பிடித்தது. 111 நகரங்களில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப் பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

Entertainment News

Popular Categories