செல்லூர் ராஜுவை பேசவிட்டால் மதுரை கவலையின்றி முன்னுக்கு வந்துவிடும்: ராமதாஸ் கிண்டல்!

07 June18 Ramadoss - 2026

கவலையின்றி வாழ்வதற்கு ஏற்ற நகரங்கள் பட்டியலில் மதுரைக்கு பின்னடைவு. 28-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது: செய்தி

– அமைச்சர் செல்லூர் ராஜு இருந்துமா இந்த நிலை. இனி அவரை கொஞ்சம் அதிகம் பேச வைத்து கவலையை மறக்க வைப்பீராக! – என்று கிண்டல் அடித்துள்ளார் ராமதாஸ்.

இது குறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் இவ்வாறு கூறியுள்ளார்.

பாமக., நிறுவுனர் ராமதாஸ் தனது  டிவிட்டர் பதிவில், கவலையின்றி வாழ்வதற்கு ஏற்ற நகரங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், மதுரைக்கு பின்னடைவு ஏற்பட்டது குறித்து இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மத்திய அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள மக்கள் எளிதாக வாழ்க்கை நடத்துவதற்கு வசதியான நகரங்கள் பட்டியலில், மஹாராஷ்டிராவில் உள்ள புனே, நவி மும்பை, மும்பை ஆகிய நகரங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில் தமிழகத்தில் திருச்சி 12வது இடத்தையும், சென்னை 14வது இடத்தையும் பிடித்துள்ளன. அந்த வகையில், தமிழகத்தில் கவலையின்றி வாழ்க்கை நடத்துதற்கு ஏற்ற நகரங்கள் பட்டியலில் திருச்சியே முதலிடம் பிடித்துள்ளது.

நாட்டின் முக்கிய நகரங்களில் நிலவும் நிர்வாகம், சமூக, பொருளாதார, அடிப்படை கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில், மக்கள் எளிதாக வாழத் தகுந்த நகரங்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்தப் பட்டியலை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நேற்று வெளியிட்டார்.

இந்தப் பட்டியலில் முதல் மூன்று இடத்தில் புனே, நவி மும்பை, மும்பை ஆகிய நகரங்கள் பிடித்தன. ஆந்திர மாநிலம் திருப்பதி, பஞ்சாப் மாநிலம் சண்டிகர், மஹாராஷ்டிர மாநிலம் தானே ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

தமிழக நகரங்கள் முறையே திருச்சி 12; சென்னை 14; கோவை 25; ஈரோடு 26; மதுரை 28, திருப்பூர் 29 ஆகிய இடங்களை பிடித்துள்ளன.

இந்தப் பட்டியலில் நாட்டின் தலைநகர் புதுதில்லி 65 ஆவது இடத்தை பிடித்தது. 111 நகரங்களில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப் பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories