சிதம்பரம் கோயிலில் திருமண நிகழ்ச்சியால் மரபு மீறல்: தீட்சிதர் பணியிடை நீக்கம்!

Chidambaram Temple RajaSabha1 - 2026

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள புகழ்பெற்ற நடராஜர் கோவிலின் ஆயிரங்கால் மண்டபத்தில், பட்டாசு ஆலை அதிபரின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இந்தத் திருமண விழா ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெற்ற விதம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலின் ஆயிரங்கால் மண்டபத்தில், சிவகாசி பட்டாசு ஆலை அதிபர் குடும்ப திருமண நிகழ்ச்சி நடந்த விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதை அடுத்து சிதம்பரம் கோயிலின் பட்டு தீட்சிதர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சிதம்பரம் கோவிலில் தங்கத்தால் வேயப்பட்ட அம்பலமாகிய மேற்கூரையின் கீழ் நடராஜர் சந்நிதி திருச்சிற்றம்பலம் உள்ளது. இந்த இடத்தில் நின்று பெருமானை வணங்குவதற்கே பெரும் சிரமங்களைச் சந்திக்கின்றனர் பக்தர்கள்.

chidambaram temple - 2026

திருச்சிற்றம்பல மேடையில் நின்று பெருமானை தரிசிக்க அவ்வளவு எளிதாக யாரும் அனுமதி பெற்று நின்றுவிட முடியாத சூழல் இருப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர். ஆனால், ஒரு தனிப்பட்ட நபரின் குடும்ப நிகழ்ச்சிக்காக, திருச்சிற்றம்பலத்தின் தங்கக் கோபுரம் மீது ஏறியும் ஆயிரங்கால் மண்டப பகுதிகளிலும் தோரணங்கள் கட்டியும் மரபு மீறப் பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, ஆன்மிக அதிர்வலை கொண்ட ஆயிரங்கால் மண்டப பகுதியில் பக்தர்கள் மிகுந்த பயபக்தியுடன் வெறும் கால்களால் மட்டுமே நடக்கின்றனர். ஆனால், திருமண நிகழ்ச்சி என்று கூறி, பலர் செருப்பு அணிந்து ஏதோ திருமண மண்டபத்துக்கு வருவது போல் வந்து சென்றதும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ALSO READ:  இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

இது தொடர்பாக அரசியல் ரீதியாகவும் நெருக்கடி அதிகரித்துள்ளது. இந்த ஒரு காரணத்தை முன்னிட்டு, சிதம்பரம் கோயிலை அரசு கையகப் படுத்த வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதை அடுத்து ஆகம விதிகளை மீறயதாகக் கூறி, சிதம்பரம் கோவில் பட்டு தீட்சிதர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

1 COMMENT

  1. யாரை ஏமாற்றுகிறார்கள் இந்த தீட்சிதர்கள்!
    தெருவில் தேர் வரும்போது புகைப்படம் எடுத்தால் அடியாட்களை வைத்து மிரட்டும் இவர்கள்,
    நடராஜர் கர்பக்கிரஹம் முழுதும் திருமணத்திற்காக மலர் அலங்காரமும், பெரிய அலங்கார நாற்காலிகளும் வந்து இறங்கி அலங்காரம் இரண்டு நாட்கள் செய்த போது பார்த்து
    வாயை மூடிக்கொண்டிருந்த இவர்கள், பொது மக்களின் எதிர்ப்பை பார்த்த பின் ஒப்புக்கு ஒருவரை காட்டி( பட்டு தீட்சிதரை) நீக்கி விட்டோம் என்பது என்ன பொய் வேலை!
    கடவுளின் காப்பாளர்களா? கொள்ளைக்காரர்களா? மக்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories