வேலை வாங்கி தருவதாக மோசடி: ரயில்வே ஊழியர் கைது

Published:

railway-job-rocket சென்னை: ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த ரயில்வே ஊழியரை போலீஸார் கைது செய்தனர். இது குறித்து போலீஸார் வெளியிட்ட செய்திக் குறிப்பில்… திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மு.தர்மராஜி. இவரது மகன் தாமரைச்செல்வன். இவருக்கு ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவரின் மகன் ஸ்ரீராமன் கூறியுள்ளார். அதற்காக ரூ. 3.5 லட்சத்தை ஸ்ரீராமனிடம் தர்மராஜி கொடுத்துள்ளார். ஆனால் வேலை வாங்கித் தரவில்லையாம். மேலும் பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதையடுத்து ஸ்ரீராமன் தன்னை மோசடி செய்து விட்டதாக தர்மராஜி போலீஸில் புகார் அளித்தார். இந்த நிலையில், ஸ்ரீராமனை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். விசாரணையில் ஸ்ரீராமன் ரயில்வே துறையில் கிரேடு 1 தொழில்நுட்ப ஊழியராக 25 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருவது தெரியவந்தது. மேலும் விசாரணையில் ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அவர் பலரிடம் மோசடி செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. போலீஸார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img