கோடை கால குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: தமிழகத்தில் பருவமழை குறைவாக பெய்து இருப்பதால் கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுகுறித்து தமிழக சட்டசபையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியவற்றில் இருந்து… தமிழகத்திற்கு ஆண்டுதோறும் கிடைக்கும் சராசரி மழை அளவு 920.09 மி.மீ ஆகும். 2014-ம் ஆண்டில் தமிழகத்திற்கு 906.09 மி.மீ மழை கிடைக்கப்பெற்றுள்ளது. இது சாதாரண மழை அளவை விட 2 சதவீதம் குறைவானதாகும். 2014-ம் ஆண்டு தமிழகத்தில் 9 மாவட்டங்களில் சராசரிக்கும் குறைவான மழையும், 18 மாவட்டங்களில் போதுமான மழையும் 5 மாவட்டங்களில் அதிக மழையும் கிடைக்கப் பெற்றது. 2014-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையில் மாநிலத்திற்கு போதுமான மழை கிடைத்த போதிலும் வேலூர், திருவண்ணாமலை, அரியலூர், திருச்சி, காஞ்சீபுரம், விருதுநகர், மதுரை, பெரம்பலூர் மாவட்டங்களில் குறைவான மழையே கிடைக்கப்பெற்றுள்ளது. எதிர்வரும் கோடைகாலத்தில் எதிர்பார்க்கப்படும் குடிநீர் பற்றாக்குறையினை சமாளிப்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர் தேவை நிலையை ஆய்வு செய்யுமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு அரசால் அறிவுரை வழங்கப்பட்டது. அதன்படி கலெக்டர்கள் அந்தந்த மாவட்டங்களில் குடிநீர் தேவையினை ஆய்வு செய்து, குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள துறை ரீதியான நிதியிலிருந்து செலவினம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப் பட்டதாக தெரிவித்துள்ளனர். குடிநீர் பற்றாகுறையை சமாளிப்பதற்காக துறை ரீதியான திட்ட ஒதுக்கீடு மற்றும் அவசர காலநிதியைத் தவிர்த்து கூடுதலாக மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும் சில பணிகள் மேற்கொள்ள உத்தேசித்துள்ளதாக துறைத் தலைவர்கள் மற்றும் கலெக்டர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தல், குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்துதல், புனரமைப்புப் பணிகள், லாரிகள் மூலம் குடிநீர் வழங் கல், சின்டெக்ஸ் டாங்குகள் அமைத்தல், குடிநீர் குழாய் களை மாற்றுதல், சிறு மின்விசைப் பம்பு அமைத்தல், கைப்பம்புகள் அமைத்தல் ஆகியவையாகும். இந்தப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய ஆணையிடப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்துக்கு ரூ.20 கோடி, திருவண்ணாமலை ரூ.10 கோடி, காஞ்சீபுரம், திருச்சி, விருதுநகர், மதுரைக்கு ரூ.5 கோடி, பெரம்பலூருக்கு ரூ.3 கோடி, அரியலூருக்கு ரூ.2 கோடி, மீதமுள்ள 23 மாவட்டங்களுக்கும் தலா ரூ.50 லட்சம், ஆக மொத்தம் ரூ.66.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதுபோல அரசுத் துறைகளான, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம், நகராட்சி நிர்வாகத் துறைக்கு தலா ரூ.10 கோடி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு ரூ.5 கோடி, பேரூராட்சி நிர்வாகத்துறைக்கு ரூ.3 கோடி, கால்நடை பராமரிப்புத் துறைக்கு ஒரு கோடி ரூபாய் என மொத்தம் ரூ.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் எதிர்வரும் கோடைகாலத்தில் மக்களுக்கு தடையில்லாமல் குடிநீர் வழங்க ஏதுவாக அமையும். என்று பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories