சென்னை: புதிய முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக் கொண்டு இன்னும் ஒரு வாரகாலம் கூட முடியவில்லை. அதற்குள் அடுத்த முதல்வர் பற்றி அஇஅதிமுக எம்எல்ஏ க்கள் பேசத் தொடங்கி விட்டனர்.
நிலக்கோட்டை எம்எல்ஏ தங்கதுரை நேற்றைக்கு நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் விரைவில் டிடிவி தினகரன் தமிழ் நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொள்ளுவார் என்று பேசியிருக்கிறார். ''எனக்கு யாரிடமும் எந்த பயமும் இல்லை. என் தொகுதி மக்கள் யாரும் என்னை எதிர்க்கவும் இல்லை. மக்கள் ஆதரவுடன்தான் நான் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்க ஆதரவு தெரிவித்தேன். தேனீ, பெரியகுளம் பகுதிகளில் அஇஅதிமுக வளர்வதற்கு டிடிவி தினகரனின் பணி மகத்தானது. தினகரன் முதல்வர் ஆகும் காலம் விரைவில் வரும்.'' என்று பேசியிருக்கிறார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending