கீழப்பாவூரில் தொடரும் திருட்டு சம்பவங்கள் விழித்துக் கொள்ளுமா ?காவல்துறை

Published:

கீழப்பாவூரில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் கருப்பசாமி(63)  இவர் எஸ்.கே.ஆர் பூங்கா தெருவில் தனது மனைவியுடன் வசித்துவருகிறார்  இரவு வீட்டில் வழக்கமாக
தூங்கும் அறையில் தூங்காமல் வேறு அறையில் தூங்கியுள்ளார் ,இந்நிலையில் மாடி
வழியாக வீட்டிற்குள் வந்த  திருடன் வீட்டில் பீரோ சாவியை தேடி எடுத்து  இரண்டு 
பீரோக்களை திறந்து பீரோவில்  இருந்த பணம் ரூ 1.86 லட்சம் மற்றும் நகை 60 கிராம் நகையை
கொள்ளையடித்துள்ளான்  சத்தம் கேட்டு பக்கத்துக்கு அறையில் இருந்து எழுந்து 
வந்த கருப்பசாமி சத்தம் போட சுதாரித்த திருடன் வீட்டை விட்டு ஓடி விட்டான்
இது குறித்து பாவூர்சத்திரம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர், அண்மைக்காலமாக கீழப்பவூரில் தொடர் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர் ,பொது இடங்களில் கண்காணிப்பு காமிரா ,மற்றும் இரவு நேரங்கள் முக்கிய இடங்களில் காவல்துறையினர் கண்காணிப்பு மற்றும் வாகன தணிக்கை செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களளின் கோரிக்கையாகும்
ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

Related articles

Recent articles

spot_img