சென்னை: யாருடைய கைப்பாவையாகவோ அமலாக்கத்துறை செயல்படுகிறது; அரசியல் காரணங்களுக்காக சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தயாநிதி மாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மத்திய அமலாக்கத்துறை நேற்றுமுன்தினம் பத்திரிகைகளுக்கு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக சொத்துகள் முடக்கம் குறித்து ஒரு நீண்ட பட்டியல் வெளியிட்டுள்ளது. இது முற்றிலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக யாருடைய தூண்டுதல் பெயரால், அவப்பெயர் உருவாக்க நடத்தப்பட்ட விவகாரமாகவே தோன்றுகிறது. சட்டவிதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டிய அமலாக்கத்துறை இந்த சொத்து முடக்க விவகாரத்தில் சட்டவிதிகள் அனைத்தையும் மீறி அவசர அவசரமாக செயல்பட்டுள்ளது என்பதே யாரோ பின்னணியில் இருப்பதை தெளிவாக்குகிறது. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சம்பந்தப்பட்ட கம்பெனிகள் எதிலும் எனக்கு பங்கோ, பாத்தையோ இல்லாதது மட்டுமல்ல, அவைகளிடமிருந்து எனக்கு எந்தவித பணப்பரிமாற்றமோ நடைபெறவில்லை என்பதை நன்கு அறிந்தும், சன் டைரக்ட் டி.வி. பிரைவேட் லிமிடெட் மற்றும் சவுத் ஏசியன் எப்.எம். லிமிடெட் கம்பெனிகளில் எனக்கு எந்தவித உரிமையும், தொடர்பும் இல்லாதபோது தொழில் ரீதியாக மேலே குறிப்பிட்ட நிறுவனங்களிடையே நடைபெற்றுள்ள பண முதலீட்டை திசை திருப்பியிருப்பது இதன் பின்னணியினை தெளிவாக்கும். இரு கம்பெனிகளுக்கிடையே வெளிநாட்டில் இருந்து பணம் முதலீடு என்றால் அதற்கு மத்திய அரசிடம் உரிய அனுமதி பெறாமல் செய்ய முடியாது என்பது சாதரண அறிவு படைத்தவர்களுக்கு தெரிந்த விவகாரம். அப்படி வியாபார ரீதியாக மத்திய அரசின் அனுமதி பெற்று நடைபெற்ற பண முதலீட்டுக்கு வண்ணம் பூசுவது அரசியல் இல்லாமல் வேறாக இருக்க முடியாது. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை சட்டவிதிகளை புறந்தள்ளி நடவடிக்கை எடுத்துள்ளது என்பதும் சட்டவிதிகளை அறிந்தவர்களால் நன்கு உணரமுடியும். அமலாக்கத்துறை சட்டவிதி என்ன சொல்கிறது? ஒரு சொத்தை முடக்க வேண்டுமென்றால் அந்த சொத்து குறிப்பிட்ட குற்றச்சாட்டின் விளைவாக பெற்றதாக இருந்ததால்தான், அதனை முடக்க வேண்டும் என தெளிவாக குறிப்பிட்டுள்ள நிலையில், சம்பந்தமே இல்லாத சொத்துக்களை முடக்கி நீண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது ஒன்றே யாருடைய நோக்கத்தையோ செயலாக்க அமலாக்கத்துறை திட்டமிட்டு செயல்பட்டுள்ளது என்பதை தெளிவாக காட்டவில்லையா? முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சொத்துகளை எல்லாம் ஆஸ்ட்ரோ நிறுவனத்தின் முதலீட்டுக்கு முன் பல ஆண்டுகளுக்கு முன்பே வாங்கப்பட்டவை என்பது தெரிந்தும், முடக்கும் இந்த முயற்சியில் அமலாக்கத்துறை ஈடுபட்டுள்ளது ஆச்சரியத்தைத்தான் தருகிறது. அமலாக்கத்துறை ஏடுகளுக்குத் தந்த செய்திக்குறிப்பில், தயாநிதி மாறனுக்கு கொடுக்கப்பட்ட சட்டவிரோத கைமாற்றுக்குப் பெறப்பட்ட தொகையைக் கொண்டு வாங்கிய சொத்துக்களை முடக்குவதாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆஸ்ட்ரோ கம்பெனி, சன் டைரக்ட் டி.வி.யிலும், சவுத் ஏசியா எப்.எம்.மிலும் முதலீடு செய்யத் தொடங்கியது 2007 ஆம் ஆண்டு இறுதியில் இருந்துதான் என்பதை அந்த நிறுவனங்கள் தெளிவாக குறிப்பிட்டுள்ளன. உண்மை அப்படியிருக்க அதற்கு முன்பாக பல ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட சொத்துக்களை இப்போது அமலாக்கத்துறை முடக்க முன்வந்துள்ளதாகக் கூறுவது விதிமுறைகளுக்கு எதிரானது அல்லவா. தவறான முறையில் வந்த பணத்தில் வாங்கிய சொத்துக்களைத்தான் முடக்க வேண்டும் என சட்டவிதி தெளிவாக தெரிவிக்கிறது. 2007 ஆம் ஆண்டு மார்சில் நான் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகிவிட்டேன். ஆனால், 2007 ஆம் ஆண்டு இறுதியில் ஆஸ்ட்ரோ நிறுவனம் முதலீட்டைத் தொடங்கியதாக கூறப்படும்போது, அந்த கால கட்டத்தில் நான் அமைச்சராகவே இல்லை. 2007 ஆம் ஆண்டுக்கு முன் வாங்கப்பட்ட சொத்துக்களை முடக்குவதாக அறிவித்துள்ளது சட்டத்தை மீறி அமலாக்கப்பிரிவு யாரையோ திருப்திப்படுத்த செயல்படுவதை தெளிவாகக் காட்டவில்லையா? மேலும், ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம் இரு நிறுவனங்களுக்கு இடையே முழுமையாக நடத்தி முறைப்படி நடைபெற்ற ஒப்பந்த விவகாரம். அதிலே எந்தவித குற்றவியலும் இருக்க முடியாது என இரு உச்ச நீதிமன்ற நீதிபதிகளான காரே, கபாடியா ஆகியோர் கருத்து தெரிவித்து அது ஏடுகளிலும் வெளிவந்துள்ளதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சிங்கப்பூர் நடுவர் தீர்ப்பாயத்தில், சிவசங்கரனுக்கும், மேக்சிஸ் நிறுவனத்துக்கும் இடையே நடைபெற்ற இதன் தொடர்பான வழக்கில், சிவசங்கரன் மேக்சிசுடன் செய்து கொண்ட ஒப்பந்தம், சட்டபடி நடந்த ஒன்று என்றும், அதில் எந்த தவறும் நடைபெறவில்லை என தீர்ப்பு வழங்கியதும் இங்கு குறிப்பிடத்தக்கது. சிவசங்கரனும், அதனை ஏற்றுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. ஆக மொத்தத்தில் அமலாக்கத்துறையில் சொத்து முடக்கும் முயற்சி என்பது சட்டவிதிகளை மீறி யாருடைய கைப்பாவையாகவோ அமலாக்கத்துறை செயல்படுகிறது என்பதை தெளிவாக்குகிறது. இதனை சட்டரீதியாக எதிர்கொண்டு அதிலே வெற்றி பெறுவேன் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறி உள்ளார். தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, ஏர்செல் நிறுவனம் கேட்டுக்கொண்ட அலைக்கற்றை உரிமத்தை நிறுத்தி, தொழிலதிபர் சிவசங்கரனை நிர்பந்தம் செய்து ஏர்செல் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு விற்கச் செய்ததாகவும், அதன் மூலம் மேக்சிஸ் நிறுவனத்திலிருந்து வேறொரு நிறுவனம் மூலம் மாறன் சகோதரர்களுக்குச் சொந்தமான சன் நெட்வொர்க் குழுமத்தில் முதலீடு என்ற வகையில் ஆதாயம் அடைந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. மாறன் சகோதரர்கள் மீது, ரூ.742 கோடி சட்டவிரோத பணப் பரிவர்த்தனை செய்ததாக சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்த நிலையில், முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், அவரின் மனைவி காவேரி கலாநிதி உள்ளிட்டவர்களுக்கு சொந்தமான ரூ.742.54 கோடி அளவிலான சொத்துகளை மத்திய அமலாக்கத்துறை முடக்கி அறிவித்துள்ளது.
Less than 1 min.Read
அமலாக்கத்துறை யாருடைய கைப்பாவையாகவோ செயல்படுகிறது: சொத்து முடக்கம் குறித்து தயாநிதி மாறன்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari
Hot this week
அரசியல்
திருப்பரன் குன்றத்துக்காக குரல் கொடுங்க! மதுரை வந்த பவன் கல்யாணிடம் ‘கோரிக்கை’!
எனது நீண்ட ஆண்டு கனவு மீனாட்சியம்மன் கோவிலில் தரிசனம் செய்ய வேண்டும் என்பது, இப்போது நிறைவேறி இருக்கிறது என்று செய்தியாளர்களிடம்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் பிப்.16 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
மதுரை
நல்லதங்காள் கோயில் சிலை உடைப்பு வழக்கை சிபிசிஐடி.,க்கு மாற்றக் கோரி கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்!
நல்லதங்காள் கோயில் சிலை உடைப்பு வழக்கை சி பி சி ஐ டி க்கு மாற்றக்கோரி கிராமத்தினர் கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்
ஆன்மிகச் செய்திகள்
பந்தளம் ஐயப்பன் மாசி உத்திர அவதார நன்னாள் கோலாகலம்!
கேரளத்தில் பிரசித்தி பெற்ற பந்தளம் வலிய கோயிக்கல் ஐயப்பன் கோயிலில் மாசி உத்திரமான இன்று, சுவாமி ஐயப்பனின் ஜன்ம தினமாகக் கொண்டாடப்படுகிறது.
News
Astro around Indian Stock Market and our future generation!
Indian Stock Market : For the consecutive 8th session Indian markets are in negative barring one or two of flat closing.

Topics
அரசியல்
திருப்பரன் குன்றத்துக்காக குரல் கொடுங்க! மதுரை வந்த பவன் கல்யாணிடம் ‘கோரிக்கை’!
எனது நீண்ட ஆண்டு கனவு மீனாட்சியம்மன் கோவிலில் தரிசனம் செய்ய வேண்டும் என்பது, இப்போது நிறைவேறி இருக்கிறது என்று செய்தியாளர்களிடம்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் பிப்.16 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
மதுரை
நல்லதங்காள் கோயில் சிலை உடைப்பு வழக்கை சிபிசிஐடி.,க்கு மாற்றக் கோரி கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்!
நல்லதங்காள் கோயில் சிலை உடைப்பு வழக்கை சி பி சி ஐ டி க்கு மாற்றக்கோரி கிராமத்தினர் கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்
ஆன்மிகச் செய்திகள்
பந்தளம் ஐயப்பன் மாசி உத்திர அவதார நன்னாள் கோலாகலம்!
கேரளத்தில் பிரசித்தி பெற்ற பந்தளம் வலிய கோயிக்கல் ஐயப்பன் கோயிலில் மாசி உத்திரமான இன்று, சுவாமி ஐயப்பனின் ஜன்ம தினமாகக் கொண்டாடப்படுகிறது.
News
Astro around Indian Stock Market and our future generation!
Indian Stock Market : For the consecutive 8th session Indian markets are in negative barring one or two of flat closing.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் பிப்.15 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
உரத்த சிந்தனை
ஒப்புமை இல்லா உயர்வு! பட்டொளி வீசும் பாரதத்தின் புகழ்!
அங்கு பிரச்சனையை உருவாக்கிய அமெரிக்காவையே இப்பொழுது அங்கு இருந்து விலகிக் கொள்கிறோம் என்று இப்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்பை வைத்து அறிவித்து
இந்தியா
திரிச்சி பேசிய சிவா! திருச்சி அடிச்ச நிர்மலா சீதாராமன்!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், திமுக எம்.பி திருச்சி சிவாவுக்கும் இடையே வார்த்தை மோதலால் நாடளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.