பசுமாட்டின் வாலையும் காதையும் அறுத்துக் கொடூரம்!

cow 2
cow 2

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த அளக்குடி கிராமம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் வீரமணியின் மகன் அண்ணாதுரை.

இவரின் பசு மாடு அதே கிராமத்தைச் சேர்ந்த ரவி, மன்மதன், சுபாஷ், கார்த்திக் உள்ளிட்டோருக்கு சொந்தமான வயலில் தொடர்ந்து பல நாட்களாக மேய்ந்து வந்ததாகவும், இதுகுறித்து அண்ணாதுரையிடம் பலமுறை கூறியும் மீண்டும் மீண்டும் வயலில் மேய்ந்ததால் பசு மாட்டை பிடித்து இரண்டு காதுகள் மற்றும் வால் பகுதி அரிவாளால் வெட்டி துண்டித்து மாட்டை அடித்து விரட்டியுள்ளனர். இதனையடுத்து ரத்தம் சொட்ட சொட்ட பசு அண்ணாதுரை விட்டுக்கு வந்துள்ளது.

இதனைப் பார்த்த அதிர்ச்சியடைந்த அண்ணாதுரை மற்றும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதுள்ளனர். அதனைத் தொடர்ந்து தனது மாட்டின் காது மற்றும் வாலை வெட்டியது தொடர்பாக வயலின் உரிமையாளர்கள் 4 பேர் மீது ஆணைக்காரன் சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

cow2
cow2

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஆணைக்காரன் சத்திரம் காவல் நிலைய காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாட்டின் காதுகளை வெட்டிய வயலின் உரிமையாளர்களான ரவி, மன்மதன் உள்ளிட்ட இருவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் சுபாஷ் மற்றும் கார்த்திக் இருவரை தேடி வருகின்றனர். இந்நிலையில் காயமடைந்த பசு மாட்டிற்கு சாமியம் கால்நடை மருத்துவமனை சேர்ந்த அரசு கால்நடை மருத்துவர் சரவணன் சம்பவ இடத்திற்கு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.

cow1
cow1

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பசு மாடு என்பது ஐந்தறிவு ஜீவன் அதற்கு வயல்வெளி, தோட்டம் என்ற பாகுபாடெல்லாம் தெரியாது, மாடு தொடர்ந்து வயலில் மேய்கிறது என்றால், அதுகுறித்து மாட்டின் உரிமையாளர் தெரிவித்து அப்போதும் நடவடிக்கை இல்லை என்றால், அது தொடர்பாக அதிகாரிகளிடம் அல்லது காவல் துறையிடம் புகார் அளித்திருக்கலாம், அதனை விடுத்து ஐந்தறிவு ஜீவன் என்றும் பாராமல் ஈவு இரக்கமின்றி பசுவின் காதுகளையும், வாலையும் துண்டித்து மனிதாபிமான இன்றி நடந்துகொண்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

Entertainment News

Popular Categories