December 6, 2025, 9:40 AM
26.8 C
Chennai

பசுமாட்டின் வாலையும் காதையும் அறுத்துக் கொடூரம்!

cow 2
cow 2

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த அளக்குடி கிராமம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் வீரமணியின் மகன் அண்ணாதுரை.

இவரின் பசு மாடு அதே கிராமத்தைச் சேர்ந்த ரவி, மன்மதன், சுபாஷ், கார்த்திக் உள்ளிட்டோருக்கு சொந்தமான வயலில் தொடர்ந்து பல நாட்களாக மேய்ந்து வந்ததாகவும், இதுகுறித்து அண்ணாதுரையிடம் பலமுறை கூறியும் மீண்டும் மீண்டும் வயலில் மேய்ந்ததால் பசு மாட்டை பிடித்து இரண்டு காதுகள் மற்றும் வால் பகுதி அரிவாளால் வெட்டி துண்டித்து மாட்டை அடித்து விரட்டியுள்ளனர். இதனையடுத்து ரத்தம் சொட்ட சொட்ட பசு அண்ணாதுரை விட்டுக்கு வந்துள்ளது.

இதனைப் பார்த்த அதிர்ச்சியடைந்த அண்ணாதுரை மற்றும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதுள்ளனர். அதனைத் தொடர்ந்து தனது மாட்டின் காது மற்றும் வாலை வெட்டியது தொடர்பாக வயலின் உரிமையாளர்கள் 4 பேர் மீது ஆணைக்காரன் சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

cow2
cow2

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஆணைக்காரன் சத்திரம் காவல் நிலைய காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாட்டின் காதுகளை வெட்டிய வயலின் உரிமையாளர்களான ரவி, மன்மதன் உள்ளிட்ட இருவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் சுபாஷ் மற்றும் கார்த்திக் இருவரை தேடி வருகின்றனர். இந்நிலையில் காயமடைந்த பசு மாட்டிற்கு சாமியம் கால்நடை மருத்துவமனை சேர்ந்த அரசு கால்நடை மருத்துவர் சரவணன் சம்பவ இடத்திற்கு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.

cow1
cow1

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பசு மாடு என்பது ஐந்தறிவு ஜீவன் அதற்கு வயல்வெளி, தோட்டம் என்ற பாகுபாடெல்லாம் தெரியாது, மாடு தொடர்ந்து வயலில் மேய்கிறது என்றால், அதுகுறித்து மாட்டின் உரிமையாளர் தெரிவித்து அப்போதும் நடவடிக்கை இல்லை என்றால், அது தொடர்பாக அதிகாரிகளிடம் அல்லது காவல் துறையிடம் புகார் அளித்திருக்கலாம், அதனை விடுத்து ஐந்தறிவு ஜீவன் என்றும் பாராமல் ஈவு இரக்கமின்றி பசுவின் காதுகளையும், வாலையும் துண்டித்து மனிதாபிமான இன்றி நடந்துகொண்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories