ஒமிக்ரான்: 5 நாட்களுக்கு பிறகு தான்… எச்சரிக்கும் வல்லுனர்கள்!

omicron - 2026

ஓமிக்ரான் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உடலில் எப்போது வைரல் லோட் அதிகம் ஆகும் என்று யு.கே மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

வைரல் லோட் என்பது உடலில் இருக்கும் வைரஸின் அளவு ஆகும்.

உலகம் முழுக்க ஓமிக்ரான் பரவல் காரணமாக தனிமைப்படுத்தும் விதிகள் மாற்றப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு ஓமிக்ரான் தீவிரமாக உடலில் இருப்பது இல்லை என்பதால் பாசிட்டிவ் ஆன நபர்களை தனிமைப்படுத்தும் நாட்கள் தளர்த்தப்பட்டுள்ளது.

உதாரணமாக யு.கேவில் ஓமிக்ரான் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தினால் போதும். முன்பெல்லாம் கொரோனா பாசிட்டிவ் என்று வந்தவர்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். ஆனால் இனி அப்படி இல்லை.

அதேபோல் இங்கிலாந்தில் ஓமிக்ரான் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் 5 நாட்கள் தனிமைப்படுத்தினால் போதும். யு.கேவில் இருக்கும் மற்ற சில நாடுகளும் இதேபோன்ற தளர்வுகளை கொண்டு வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ஓமிக்ரான் கேஸ்கள் தீவிரமாக இல்லை. இதனால் வைரல் லோட் உடலில் குறைவாக உள்ளது. இதனால் பரவல் அதிகம் இல்லை. அதனால் தனிமைப்படுத்தும் விதிகள் தளர்த்தப்படுவதாக பல்வேறு உலக நாடுகள் அறிவித்துள்ளது.

ALSO READ:  திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

அதாவது ஓமிக்ரான் கேஸ்கள் எல்லாம் மைல்டு கேஸ்கள் என்று பல்வேறு உலக நாடுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இது மைல்ட்டாக இருந்தாலும் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். வேகமாக பரவுகிறது.

மக்கள் இடையே காட்டு தீ போல ஓமிக்ரான் பரவி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தும் விதிகளை மாற்ற வேண்டும் என்று யு.கே மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஆராய்ச்சி கட்டுரையை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

யு.கேவை சேர்ந்த பெரிய மருத்துவர் குழு ஒன்று உலகம் முழுக்க பல நாடுகளில் ஓமிக்ரான் பாதிக்கப்பட்ட நோயாளிகளை சோதனை செய்துள்ளனர். இதை வைத்து 79 ஆய்வு கட்டுரைகளை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆய்வு கட்டுரைகளின் தொகுப்பு science direct என்ற பக்கத்தில் வெளியாகி உள்ளது. அதன்படி ஒருவரை ஓமிக்ரான் தாக்கி சராசரியாக 5வது நாளில்தான் உடலில் அது தீவிரம் அடைகிறது. 5வது நாளில்தான் உடலில் வைரல் லோட் அதிகமாக இருக்கிறது.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

அதாவது 5வது நாளுக்கு பின்பும் கூட ஓமிக்ரான் நோயாளி ஒருவர் இன்னொருவருக்கு ஓமிக்ரானை பரப்ப முடியும். வெளியில் பார்க்க அந்த நபர் குணமடைந்தது போல இருக்கலாம்.

கேஸ் மைல்டாக இருப்பதால் குணமடைந்தது போல இருக்கலாம். ஆனாலும் அவரின் உடலில் வைரல் லோட் இருப்பதால் அவரால் கொரோனாவை பரப்ப முடியும் என்று கூறியுள்ளனர். சிலருக்கு 8-9 நாட்கள் கூட உடலில் வைரல் லோட் அதிகம் இருந்துள்ளது.

இந்த ஆய்வு முடிவில் சரியாக 10வது நாளில்தான் உடலில் வைரல் லோட் மொத்தமாக குறைந்துள்ளது. அதாவது 10வது நாளில்தான் ஒருவர் ஓமிக்ரானை பரப்பாத அளவிற்கு பாதுகாப்பான நபராக மாறுவார்.

எனவே குறைந்தது 10 நாட்களாவது ஓமிக்ரான் நோயாளிகளை தனிமைப்படுத்த வேண்டும் என்று இந்த ஆய்வு கட்டுரை அறிவுறுத்தி உள்ளது. ஜப்பான் மற்றும் University of Exeter ஆகியவை நடத்திய ஆய்வுகளும் இதைத்தான் குறிப்பிட்டுள்ளது.

எனவே இதற்கு ஏற்றபடி உலக நாடுகள் தனிமைப்படுத்தும் விதிகளை மாற்ற வேண்டும் என்று இந்த ஆய்வு கூறியுள்ளது. தனிமைப்படுத்தும் விதிகள் 5 நாட்களாக இருப்பது சரியாக இருக்காது. இதனால் ஓமிக்ரான் கேஸ்கள் மேலும் பரவலாம்

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

5வது நாளில்தான் உடலில் வைரல் லோட் அதிகம் இருக்கிறது. இதனால் எந்நெந்த நாடுகளில் குறைந்த தனிமைப்படுத்தும் விதிகள் உள்ளதோ அங்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று யு,கே மருத்துவர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

Topics

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories