February 22, 2026, 8:46 PM
27.3 C
Chennai

ஜெயலலிதாவை நானும்தான் பார்க்கவில்லை: ஆறுமுகசாமி ஆணையத்தில் விவேக் பதில்!

சென்னை:

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தானும் பார்க்கவில்லை என்று விவேக், ஆறுமுகசாமி ஆணையத்தில் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, உடல் நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு, 75 நாள்கள் சிகிச்சையில் இருந்தார். பின்னர் கடந்த 2016 டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பிலும் கூறப்பட்டது. இதனால், அவரது மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையம், ஜெயலலிதா தொடர்புடைய பலரிடமும் அவர் அப்பல்லோவில் இருந்த நாட்கள் உள்பட சில விவரங்களை விசாரித்து வருகிறது. இந்த ஆணையத்தில் ஆஜராகுமாறு இளவரசியின் மகனும் ஜெயா டிவி சிஇஓவுமான விவேக்கிற்கு கடந்த 9ஆம் தேதி ஆணையம் சம்மன் அனுப்பியது.

இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரி த்து வரும் ஆறுமுகசாமி கமிஷனில் இளவரசியின் மகன் விவேக் செவ்வாய்க்கிழமை ஆஜரானார். அவரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தப் பட்டது. அப்போது ஜெயலலிதா குறித்து அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அடுத்து, வரும் 28 ஆம் தேதி விசாரணை ஆணையத்தில் மீண்டும் ஆஜராக வேண்டும் என நீதிபதி கூறியுள்ளார்.

இதனிடையே ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, தான் அவரை சந்திக்கவில்லை என விவேக் விசாரணை ஆணையத்தில் தெரிவித்தாராம்.

ஏற்கெனவே ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அமைச்சர்கள் உள்பட பலரும் அவரை நேரில் பார்க்கவில்லை என தெரிவித்தனர். மத்திய அமைச்சர்கள், ஆளுநர், அப்போதைய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் மருத்துவமனைக்குச் சென்று ஜெயலலிதாவை பார்க்காமலேயே திரும்பினர்.

ஆனால், சசிகலா மட்டுமே ஜெயலலிதாவை பார்த்துக் கொண்டதாகவும் வேறு யாரையும் அவர் அனுமதிக்கவில்லை என்றும் கூறப்பட்டு வந்த நிலையில் ஜெயலலிதாவின் பாசத்திற்கு உரியவராகவும், ஜெயலலிதாவால் கூடவே இருந்து வளர்க்கப்பட்டவராகவும் அடையாளம் காணப்பட்ட விவேக்கூட ஜெயலலிதாவை தான் மருத்துவமனையில் நேரில் சென்று பார்க்கவில்லை என்று கூறியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெருத்த அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories