சரியான காரணம் குறிப்பிடாமல் அமைச்சர் இலாகா மாற்ற கோப்பு: திருப்பி அனுப்பிய ஆளுநர்!

governor walkout2 - 2026

அமைச்சர் செந்தில்பாலாஜியின் இலாகாவை மாற்றி இருவருக்குப் பகிர்ந்து அளித்த பரிந்துரைக் கோப்புகளில் சில சந்தேகங்களை எழுப்பி திருப்பி அனுப்பினார் ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவி.

செந்தில் பாலாஜி கவனித்து வந்த இரு இலாக்காகளில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு கூடுதலாக மின்சாரத்துறையும், அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையும் ஒதுக்கீடு செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மாநில அமைச்சரவக் குழு கூடி தீர்மானித்த படி இது தொடர்பான ஆவணங்கள் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி நீடிப்பார் எனவும் பரிந்துரையில் குறிப்பிட்டு, அதை ஆளுநரின் ஒப்புதலுக்கு தமிழக அரசின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால், சரியான காரணம் குறிப்பிடாததால், இலாகாவை பகிர்ந்து அளித்த பரிந்துரைக் கோப்புகளை ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவி திருப்பி அனுப்பினார். முக்கியமாக செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருப்பதால், அவர் கவனித்து வந்த துறைகள் மாற்றி அளிக்கப் படுவதாக இருந்திருக்க வேண்டும். ஆனால் வெறுமனே, ‘ஐ யாம் சஃபரிங் ஃப்ரம் ஃபீவர்’ என்று பள்ளிக் குழந்தைகள் லீவ் லெட்டர் எழுதுவது போல், செந்தில் பாலாஜிக்கு உடல் நலமின்றி மருத்துவமனையில் இருப்பதால் என்ற காரணத்தைக் குறிப்பிட்டு துறைகளை மாற்றி பரிந்துரை செய்து கோப்புகளை அனுப்பியிருக்கிறார்கள் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

கோப்புகள் திருப்பி அனுப்பப் பட்டது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், அரசு அனுப்பி உள்ள பரிந்துரைகளில் ஆளுநர் ஒரு சில சந்தேகங்களை எழுப்பி திருப்பி அனுப்பினார்’ என்று தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories