நகரி: உச்ச நீதிமன்றம் கண்டித்ததை அடுத்து, ஆந்திராவில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி சிலைகளை 15 நாட்களுக்குள் அகற்ற முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார். இந்நிலையில் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தையும், முன்னாள் முதல்வருமான ராஜசேகர ரெட்டியின் சிலைகள் ஆங்காங்கே உடைக்கப்பட்டு வருகின்றன. தெலுங்கு தேசம் கட்சியினரே சிலைகளை உடைப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுவரும் நிலையில், சித்தூர் மாவட்டம் குண்டலபள்ளி கிராமத்தில் ராஜசேகர ரெட்டி சிலை உடைக்கப்பட்டது. இதை கண்டித்து, எம்.எல்.ஏ., சுனில் குமார் தலைமையில் போராட்டம் நடந்தது. நகரி எம்.எல்.ஏ., நடிகை ரோஜா சிலை உடைப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் ராஜசேகர ரெட்டி சிலைகள் உடைப்பு: பதட்டம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari