December 5, 2025, 12:01 PM
26.9 C
Chennai

13 வயது மாணவியை பாலியல் தொழிலுக்கு தள்ளிய தாய்! 2 பேர் கைது; 5 பேருக்கு வலைவீச்சு!

 

0456 - 2025 036 - 2025

தமிழக கேரளா எல்லையான நெல்லை மாவட்டம் புளியரையில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் ஸ்ரீ மூலப்பேரி நீர்த்தேக்கம் அமைந்துள்ளது.

இந்த நீர்தேக்கத்திற்கு அருகில் கேரளா மாநிலம் அடூர் பகுதியைச் சார்ந்த சைகால் சஜி என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தை புளியரையைச் சார்ந்த தென்காசியில் பணியாற்றும் போலீஸ்காரர் மாரியப்பன் என்பவர் ஒப்பந்தத்திற்கு எடுத்து விவசாயம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த இடத்தில் கேரள மாநிலம் ஆரியங்காவு பகுதியைச் சார்ந்த கிரிஜா என்ற பெண் வசித்து வருகிறார். இவரது 13 வயது மகள் அனு (பெயர் மாற்றப் பட்டுள்ளது) திருவனந்தபுரத்திலுள்ள ஒரு பள்ளியில் தங்கி படித்து வந்துள்ளார்.

அவரும் விடுமுறைக்காக ஊருக்கு வந்து அம்மாவுடன் கடந்த ஒரு மாதமாக தங்கியுள்ளார். இந் நிலையில் கடந்த 13ஆம் தேதி மகளைக் காணவில்லை என புளியரை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் மகள் அனுவை ஐயப்பன் கேரளாவுக்கு அழைத்துச் சென்றது தெரிய வரவே கிரிஜா தென்மலை போலீசில் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து தென்மலை போலீசார் கிரிஜாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவரே தனது மகளை தனது வீட்டில் வைத்து இரவில் பலருக்கு விருந்தாக்கியதும், இதனைத் தொடர்ந்து சுரண்டை, பாவூர்சத்திரம் ஆகிய பகுதிகளுக்கு அழைத்துச் சென்று விருந்தாக்கியதும், இதைத் தொடர்ந்து ஐயப்பனும் அனுவை பாலியல் தொழிலுக்கு அழைத்துச் சென்றதும் தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தென்மலை போலீசார் ஐயப்பன் கட்டுப்பாட்டில் இருந்து அனுவை மீட்டனர். ஐயப்பன் தப்பி விட்டார்.

உடனடியாக கிரிஜாவைக் கைது செய்த போலீஸார் அவர் கொடுத்த தகவலின் பேரில் ஆரியங்காவு பகுதியைச் சார்ந்த சஜியை கைது செய்தனர். மேலும் சிறுமியை சீரழித்த அஜித், ஐயப்பன் உள்ளிட்ட சிலரை தென்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று தென்மலை காவல்துறை ஆய்வாளர் சுதீர், உதவி ஆய்வாளர் பிரேம்லால் உள்ளிட்டவர்கள் கிரிஜாவையும், சஜியையும் அழைத்துக் கொண்டு புளியரை பகுதியிலுள்ள வீட்டிற்கு வந்தனர்.

அங்கு சிறுமி அணிந்திருந்த முக்கிய தடயங்களான ஆடைகளை சஜியிடம் கேட்டு அவற்றைக் கைப்பற்றினர். தொடர்ந்து இருவரையும் அவர்கள் சுரண்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

13 வயது சிறுமியை தாயே பாலியல் தொழிலில் தள்ளிய சம்பவம் கேரள மாநிலத்தில் மட்டுமின்றி இரு மாநில எல்லையில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories