வருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்: மேலும் ஒரு மாதம் நீட்டிக்க எதிர்பார்ப்பு!

income - 2026

சென்னை : வருவாய் ஈட்டும் அனைவரும் அபராதமின்றி வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய ஆக.31ம் தேதி இன்றே கடைசி நாள். வருமான வரி கணக்கை இன்று முடிக்கவில்லை என்றால் அபராதம் செலுத்த வேண்டி வரும் என வருமான வரித்துறை கண்டிப்புடன் கூறியுள்ளது. இருப்பினும், மேலும் ஒரு மாதத்துக்கு கால அவகாசம் நீட்டிக்கப் படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த 2017 – 18க்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் கடந்த ஏப்ரல் மாதம் துவங்கி நடந்து வருகிறது. நடப்பு ஆண்டு முதல் மாத ஊதியம், மாத ஓய்வூதியம் என ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்துக்கு மேல் வருமான வரி உச்ச வரம்பைத் தாண்டும் அனைவரும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வருமான வரியைக் குறைப்பதற்காக வரி ஆதாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு உச்சவரம்புக்குக் கீழ் வருமானம் இருந்தாலும், இந்த ஆண்டு வருமான வரிக் கணக்கை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும். இதற்கான அவகாசம் இன்றுடன் முடிகிறது. இன்றைய தினத்துக்குள் தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் கட்ட வேண்டி வரும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

இன்றைக்குள் கட்டாதவர்களில் ரூ. 5 லட்சத்துக்குக் கீழ் வருமானம் உள்ளவர் என்றால் ரூ. 1,000 தாமத கட்டணமும், ரூ. 5 லட்சத்துக்கு மேல் வருமானம் இருப்போர் ரூ.5,000 தாமத கட்டணமும் செலுத்தி, டிச.31க்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யலாம்.

வரும் 2019 ஜனவரி முதல் மார்ச் 31 ஆம் தேதிக்குள், ரூ.10 ஆயிரம் தாமத கட்டணம் செலுத்தி வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியும். அதன் பின், 2017 – 18ம் ஆண்டுக்கான வருமான வரிகணக்கு தாக்கல் செய்ய முடியாது.

இந்த நிலையில், வருமான வரி அலுவலக கௌண்டர்களில் உள்ள நெருக்கடி மற்றும், கடைசி நேர நெருக்குதல்களைக் காரணம் காட்டியும், ஆன்லைனில் தாக்கல் செய்வோருக்கு இணையதளம் முடக்கம் காரணமாகவும் மேலும் தாமதமாகிறது என்றும், எனவே கால அவகாசத்தை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என்றும் பயனாளிகள் கோரியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories