வருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்: மேலும் ஒரு மாதம் நீட்டிக்க எதிர்பார்ப்பு!

income - 2026

சென்னை : வருவாய் ஈட்டும் அனைவரும் அபராதமின்றி வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய ஆக.31ம் தேதி இன்றே கடைசி நாள். வருமான வரி கணக்கை இன்று முடிக்கவில்லை என்றால் அபராதம் செலுத்த வேண்டி வரும் என வருமான வரித்துறை கண்டிப்புடன் கூறியுள்ளது. இருப்பினும், மேலும் ஒரு மாதத்துக்கு கால அவகாசம் நீட்டிக்கப் படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த 2017 – 18க்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் கடந்த ஏப்ரல் மாதம் துவங்கி நடந்து வருகிறது. நடப்பு ஆண்டு முதல் மாத ஊதியம், மாத ஓய்வூதியம் என ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்துக்கு மேல் வருமான வரி உச்ச வரம்பைத் தாண்டும் அனைவரும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வருமான வரியைக் குறைப்பதற்காக வரி ஆதாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு உச்சவரம்புக்குக் கீழ் வருமானம் இருந்தாலும், இந்த ஆண்டு வருமான வரிக் கணக்கை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும். இதற்கான அவகாசம் இன்றுடன் முடிகிறது. இன்றைய தினத்துக்குள் தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் கட்ட வேண்டி வரும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

இன்றைக்குள் கட்டாதவர்களில் ரூ. 5 லட்சத்துக்குக் கீழ் வருமானம் உள்ளவர் என்றால் ரூ. 1,000 தாமத கட்டணமும், ரூ. 5 லட்சத்துக்கு மேல் வருமானம் இருப்போர் ரூ.5,000 தாமத கட்டணமும் செலுத்தி, டிச.31க்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யலாம்.

வரும் 2019 ஜனவரி முதல் மார்ச் 31 ஆம் தேதிக்குள், ரூ.10 ஆயிரம் தாமத கட்டணம் செலுத்தி வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியும். அதன் பின், 2017 – 18ம் ஆண்டுக்கான வருமான வரிகணக்கு தாக்கல் செய்ய முடியாது.

இந்த நிலையில், வருமான வரி அலுவலக கௌண்டர்களில் உள்ள நெருக்கடி மற்றும், கடைசி நேர நெருக்குதல்களைக் காரணம் காட்டியும், ஆன்லைனில் தாக்கல் செய்வோருக்கு இணையதளம் முடக்கம் காரணமாகவும் மேலும் தாமதமாகிறது என்றும், எனவே கால அவகாசத்தை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என்றும் பயனாளிகள் கோரியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories