வருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்: மேலும் ஒரு மாதம் நீட்டிக்க எதிர்பார்ப்பு!

income - 2026

சென்னை : வருவாய் ஈட்டும் அனைவரும் அபராதமின்றி வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய ஆக.31ம் தேதி இன்றே கடைசி நாள். வருமான வரி கணக்கை இன்று முடிக்கவில்லை என்றால் அபராதம் செலுத்த வேண்டி வரும் என வருமான வரித்துறை கண்டிப்புடன் கூறியுள்ளது. இருப்பினும், மேலும் ஒரு மாதத்துக்கு கால அவகாசம் நீட்டிக்கப் படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த 2017 – 18க்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் கடந்த ஏப்ரல் மாதம் துவங்கி நடந்து வருகிறது. நடப்பு ஆண்டு முதல் மாத ஊதியம், மாத ஓய்வூதியம் என ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்துக்கு மேல் வருமான வரி உச்ச வரம்பைத் தாண்டும் அனைவரும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வருமான வரியைக் குறைப்பதற்காக வரி ஆதாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு உச்சவரம்புக்குக் கீழ் வருமானம் இருந்தாலும், இந்த ஆண்டு வருமான வரிக் கணக்கை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும். இதற்கான அவகாசம் இன்றுடன் முடிகிறது. இன்றைய தினத்துக்குள் தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் கட்ட வேண்டி வரும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

இன்றைக்குள் கட்டாதவர்களில் ரூ. 5 லட்சத்துக்குக் கீழ் வருமானம் உள்ளவர் என்றால் ரூ. 1,000 தாமத கட்டணமும், ரூ. 5 லட்சத்துக்கு மேல் வருமானம் இருப்போர் ரூ.5,000 தாமத கட்டணமும் செலுத்தி, டிச.31க்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யலாம்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 11 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

வரும் 2019 ஜனவரி முதல் மார்ச் 31 ஆம் தேதிக்குள், ரூ.10 ஆயிரம் தாமத கட்டணம் செலுத்தி வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியும். அதன் பின், 2017 – 18ம் ஆண்டுக்கான வருமான வரிகணக்கு தாக்கல் செய்ய முடியாது.

இந்த நிலையில், வருமான வரி அலுவலக கௌண்டர்களில் உள்ள நெருக்கடி மற்றும், கடைசி நேர நெருக்குதல்களைக் காரணம் காட்டியும், ஆன்லைனில் தாக்கல் செய்வோருக்கு இணையதளம் முடக்கம் காரணமாகவும் மேலும் தாமதமாகிறது என்றும், எனவே கால அவகாசத்தை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என்றும் பயனாளிகள் கோரியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories