December 5, 2025, 3:39 PM
27.9 C
Chennai

பாஜக., தலைவர் பதவி.. என்ன… அவ்ளோ லேசானதுன்னு நெனச்சிட்டீங்களா?

tamilisai soundarrajan - 2025
File copy

சென்னை: பாஜக., தலைவர் பதவி என்பது அவ்வளவு இலகுவானது என்று நினைக்கிறீர்களா என்று நகைச்சுவையுடன் எஸ்.வி.சேகர் கூறிய கருத்துக்கு நகைச்சுவை மிளிர பதிலளித்தார் பாஜக., தமிழக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்திரராஜன்.  அப்போது அவரிடம், நடிகர் எஸ்.வி.சேகர், தன்னிடம் பாஜக., தலைமைப் பொறுப்பை அளித்தால் ஏற்றுக் கொண்டு வாக்கு வங்கியை உயர்த்திக் காட்டுவேன் என்று கூறியது பற்றி கருத்து கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், இதற்கு பதில் சொல்லவதை விட சிரித்துவிட்டு விட்டு விடலாம். பல சிரிப்பு நாடகங்களில் நடித்து அதைப் போல் நாடகத்தில் பேசுவதாக நினைத்துப் பேசியிருப்பார். பாரதீய ஜனதா கட்சி தலைவர் பதவி என்ன அவ்வளவு இலகுவானதா? என்று கேள்வி எழுப்பினர்.

செய்தியாளர் சந்திப்பில் தமிழிசை கூறியவை…

பாரதீய ஜனதா கட்சி இரண்டு போராட்டங்களை அறிவித்துள்ளது. செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் நடந்த கலவரத்தில் எந்த முன் அறிவிப்புமின்றி எங்கள் கட்சியைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எங்கள் கட்சியினர் கைது தொடர்கிறது.

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு பல கட்டுபாடுகளை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். விநாயகர் சிலைகளை சேதப்படுத்தியவர்களை விட்டுவிட்டு எங்கள் சகோதரர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து வரும் 27ஆம் தேதி தென்காசி , செங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்.

தாமிரபரணி புஷ்கர விழாவை அரசு கொண்டாட வேண்டும். உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அரசு விழாவாகவே நடக்கிறது. அதுபோல் தமிழகத்திலும் அரசு விழாவாக நடத்தப்பட வேண்டும்.

காவிரி முழுமையாக தூய்மையாக இருக்க காவிரி புஷ்கரம் கொண்டாடப்பட்டது. பல ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் புஷ்கர விழா இந்த முறை தாமிரபரணியில் வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு சில இடங்களில் மறுப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புஷ்கர விழா சுமூகமாக நடக்க அரசு எல்லா ஆயத்த பணிகளையும் செய்ய வேண்டும். பாதுகாப்பு இல்லாத இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அக்டோபர் 2ஆம் தேதி திருநெல்வேலியில் உண்ணாவிரதம் நடக்க உள்ளது. இந்துமத விழாக்களுக்கு அதிக கட்டுபாடுகளை விதிப்பதை எதிர்த்து இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் கைது செய்யும் விவகாரத்தில் ஒருதலைப் பட்சமாக நடக்கிறதா என்பதை காவல் துறையிடம்தான் கேட்க வேண்டும். எச்.ராஜா பதிவில் உள்ள தனது குரல் இல்லை என்றதும் நீதிமன்றத்தில் வழக்காடி உண்மை இருக்கும் பட்சத்தில் வெளியே வருவார். காவல் துறை பாரபட்சமாக செயல்படுகிறதா என்பதை காவல் துறையிடம் தான் கேட்க வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலை நிச்சயமாக குறைக்கப்படும். பேருந்துக் கட்டணத்தை உயர்த்த முயற்சி செய்வதைவிட மாநில அரசுகள் வாட் வரியை குறைக்க முயற்சி செய்யலாம். ஜி.எஸ்.டி.யில் பெட்ரோலைக் கொண்டு வர ஆதரவு தரலாம். எல்லாரும் இணைந்து பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

மத்திய அரசு மக்கள் மீது எந்த சுமையும் ஏற்றாது. பெட்ரோல், டீசல் விலை குறைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாற்றாக எத்தனால், பேட்டரி கார் போன்றவற்றிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

ரபேல் விமானம் பற்றி ரவிசங்கர் பிரசாத், நிர்மலா சீத்தாராமன், அருண் ஜேட்லி ஆகியோர் தெளிவாக விளக்கம் அளித்துவிட்டனர். பிரதமர் மோடி அரசில் ஒரு சதவீதமும் கூட ஊழலுக்கு இடமில்லை. போபர்ஸ் ஊழல் பற்றி மக்கள் மறக்காததால் ராகுல்காந்தி எதையாவது சொல்லிக் கொண்டு இருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories