ஆளுநராக இருந்தாலும், அண்ணன் மகளாக அழுது கொண்டிருக்கிறேன்: தமிழிசை உருக்கம்!

Published:

thamizisai-and-vasanthakumar
thamizisai-and-vasanthakumar

கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் இன்று மாரை காலமானார் இந்நிலையில் அவருக்கு பலரும் தங்கள் இதய அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்

 உழைப்பால் உயர்ந்தவர் வசந்தகுமார் என்று பல்வேறு தரப்பினரும் கட்சி பேதமின்றி அவருக்கு புகழ் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் வசந்தகுமாரின் அண்ணன் குமரி அனந்தனின் மகள் தமிழிசை சௌந்தரராஜன் தற்போது தெலங்கானா மாநில ஆளுநராக இருக்கிறார் அவர் தனது சித்தப்பா வசந்தகுமாரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து கடிதமாக எழுதி இருந்தார் அது தற்போது வைரலாகி வருகிறது….

சித்தப்பா!
நீங்கள் இல்லை என்பதை என் மனது நம்ப மறுக்கிறது… என் சிறு வயது முதல் அவருக்கு திருமணம் வரை ஒன்றாகவே வளர்ந்தோம்…

அப்பா குமரி அனந்தனின் அரசியல் தாக்கம் இரண்டு பேரிடமும் இருந்தது. ஆனால் வேறு வேறு பாதையில் பயணித்தோம்…

இயக்கம் வேறாக இருந்ததால், இணக்கமாக இல்லையே தவிர இரத்த பாசம் இருவரிடமும் உண்டு, தூரத்தில் இருந்தே அவரின் சுறுசுறுப்பையும், துருதுருப்பையும் கண்டு வியந்திருக்கிறேன்…

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிறுவயதில் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டது, சண்டையிட்டது எல்லாம் நினைவிற்கு வருகிறது…

வசந்த் & கோ என்ற சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி பலபேருக்கு பணிகொடுத்த தருமம்கூட காப்பாற்றவில்லையே என்று என் மனம் பதைபதைக்கிறது…

கண்டிப்புடன் கண்ணீரை அடக்க முயற்சித்தாலும், கரைபுரண்டு கண்ணீர் பெருகுகிறது…

ஆளுநராக இருந்தாலும், அண்ணன் மகளாக அழுது கொண்டிருக்கிறேன்..

  • தமிழிசை சௌந்தரராஜன்…

Related articles

Recent articles

spot_img