பீப் பாடல் மற்றும் இளையராஜா குறித்த விமர்சனம்: ஜேம்ஸ் வசந்தன் விளக்கம்

சிம்பு பாடிய பாடல் ஒன்று அண்மையில் இணையத்தில் வெளியானது. பீப் பாடல் என்கிற பெயரில் வெளியான அந்தப் பாடல் ஆபாச வார்த்தைகளுடன் இருந்ததால், கடுமையான எதிர்ப்பைச் சம்பாதித்துள்ளது.

பீப் பாடல் குறித்து இளையராஜாவிடம் ஒரு நிருபர் கேள்வி எழுப்பியபோது அவர் மிகவும் கோபமடைந்து நிருபரைச் சாடினார். இதனால் இளையராஜா பேசியது சரியா என்கிற ரீதியில் சமூக வலைத் தளங்களில் தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இளையராஜா, நிருபரைக் கண்டித்தது குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், தனது ட்விட்டர் பக்கத்தில், ஒளிந்து கொண்டிருந்த நிஜ சொரூபத்தை வெளிக்கொணர்ந்த அந்த இளம் பத்திரிகையாளனைப் பாராட்ட வேண்டும் என்று ட்வீட் செய்தார்.

இதற்கு இளையராஜாவின் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனால் அந்த ட்வீட்டைப் பிறகு நீக்கினார் ஜேம்ஸ் வசந்தன்.

இப்போது தனது வலைத்தளத்தில், இளையராஜாவை விமரிசனம் செய்தது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

இளையராஜாவிடம் விவேகமில்லாத நிருபர் ஒருவர், பீப் பாடல் குறித்து கேட்கிறார். முதிர்ச்சியில்லாத விதத்தில் நிருபர் கேள்வி கேட்டார் என்பதில் எனக்கு எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

ஆனால், இளையராஜா இச்சம்பவத்தை இன்னும் கொஞ்சம் பொறுமையாகக் கையாண்டிருக்கலாம். (அரைவேக்காட்டுத்தனமான சில நிருபர்களின் அதுபோன்ற கேள்விகளுக்கு பதிலளிக்காமல் பொறுமையுடன் இருப்பது எவ்வளவு கடினம் என்பதும் எனக்குத் தெரியும்.)

எனக்கு நிறைய கோபமான கடிதங்கள் வரலாம். அதற்காக நான் எண்ணியதைப் பகிராமல் இருக்கமுடியாது. இளையராஜாவின் இசையின் ரசிகன் நான். அதற்காக நான் ஒப்புக்கொள்ள முடியாத நடவடிக்கையைக் கண்டுகொள்ளாமல் இருக்கமுடியாது. நான் அவருடைய ரசிகன். வெறியன் அல்ல.

30 துறைகளைச் சார்ந்த சினிமாவை அதைப் பற்றிய அறிவு இல்லாமல் ஒருவர் விமரிசனம் செய்ய முடிகிறபோது, பொது இடத்தில் நடந்த சம்பவத்தைப் பற்றி யார் வேண்டுமானாலும் கருத்து கூறமுடியும் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். 

images cinema illayaraja james vasanth m vert - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories