முன்ஜாமின் வழங்க அரசு கடும் எதிர்ப்பு! ரஞ்சித்துக்கு நீதிமன்றம் சரமாரி கேள்விகள்!

madurai high court - 2026

தமிழகத்தின் கௌரவம், தமிழ் மரபின் அடையாளமான மாமன்னன் ராஜராஜ சோழனைப் பற்றி அவதூறாகவும் அசிங்கப் படுத்தியும் மிகக் கேவலமாகவும் பேசி, சாதி மோதலுக்கும் சமூகப் பதற்றத்துக்கு வித்திட்டுள்ள இயக்குநர் பா.ரஞ்சித் மீது பல்வேறு இடங்களில் புகார்கள் பதிவு செய்யப் பட்டு வருகின்றன. இந்நிலையில், முன் ஜாமின் கோரி பா.ரஞ்சித் தரப்பில் தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, வரும்19-ஆம் தேதி வரை அவரை கைது செய்யக்கூடாது  என்று காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாரம்பரியத்தின் அடையாளமான மாமன்னன் ராஜராஜ சோழன் குறித்து தரக் குறைவாகவும் அவதூறு கிளப்பும் வகையிலும் பேசிய வழக்கில் இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு முன்ஜாமீன் வழங்க அரசுத் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் கடந்த ஜூன் மாதம் 5 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் ’தனது சாதியை மட்டுமே முன்னிறுத்தி வெறும் நான்கு சினிமாக்களை இயக்கி டப்பாவுக்குள் முடங்கிப் போகச் செய்துவிட்ட’ பா.ரஞ்சித், உலகின் பெரும் பகுதியில் தமிழ் மரபின் வெற்றிக் கொடியை நாட்டி, தமிழர் கலாசாரத்தைப் பரப்பிய தமிழ் மரபின் மாமன்னர் ராஜராஜ சோழனை தரக் குறைவாக விமர்சித்தார்.

03 June7 ranjith 1 - 2026தலித்களின் நிலத்தைப் பறித்தவர் ராஜராஜ சோழன்; தேவதாசிகளை ஏற்படுத்தி பல பெண்களை நாசம் செய்தவர் என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி பேசினார். அவரது பேச்சு, அவரைப் பின்னிருந்து ஏதோ சக்திகள் இயக்கியது போன்று தெரிந்தது என்று பலரும் பா.ரஞ்சித்தை சாடி வருகின்றனர்.

ALSO READ:  தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

இதைத் தொடர்ந்து சாதி மோதலைத் தூண்டும் வகையில் பேசியதாக தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள், கும்பகோணம் ஆகிய நகர காவல் நிலையங்களிலும் நாகை மாவட்டம் மயிலாடுதுறை காவல் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பல்வேறு இடங்களில் வழக்குகள் பதிவு செய்யப் பட்டு வருவதால், கைது நடவடிக்கைக்கு பயந்து இயக்குநர் ரஞ்சித் முன்ஜாமீன் கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நேற்று மனு தாக்கல் செய்தார்!

அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம், பேசுவதற்கு பல விஷயங்கள் இருக்கும் போது மக்கள் போற்றும் மன்னரைப் பற்றி பேசியது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ரஞ்சித் தனது பேச்சு எந்த சமூகத்திலும் பிளவை ஏற்படுத்தும் வகையில் இல்லை என்றும், பல்வேறு வரலாற்றுப் புத்தகங்களில் கூறியிருப்பதையே தானும் குறிப்பிட்டதாகவும், தனது பேச்சு சமூக வலைதளங்களில் தவறாக சித்திரிக்கப்படுகிறது என்றும் கூறினார்.

rajaraja cholan - 2026இதற்கு பதிலளித்த நீதிபதி, புகழ்பெற்ற மன்னர் ராஜராஜ சோழன் குறித்து பேசியதை தவிர்த்திருக்க வேண்டும், அரசியல் செய்ய எவ்வளவோ விஷயங்கள் இருக்கும் போது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மன்னர் குறித்து பேசியது தவறு! ஜாதி மத பேதமின்றி ராஜராஜ சோழன் போற்றப்பட்டு வருகிறார். மன்னர் ராஜராஜ சோழன் காலம் தமிழகத்தின் கட்டடக் கலைக்கு சான்றாக அமைந்த காலம் என்று கூறினார்.

ALSO READ:  பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

இந்நிலையில் இயக்குநர் ரஞ்சித்துக்கு முன்ஜாமீன் வழங்க அரசுத் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ரஞ்சித் மீது புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. எனவே அவரிடம் விசாரிக்க வேண்டும் என்பதால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்றது அரசு.

ranjith2 - 2026இதை அடுத்து வழக்கு தொடர்பாக காவல்துறை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

ரஞ்சித்தை புதன்கிழமை வரை கைது செய்ய மாட்டோம் என அரசுத் தரப்பு உத்தரவாதத்தைப் பெற்ற நீதிமனறம், வரும் 19ஆம் தேதி வரை ரஞ்சித்தை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்தது.

இதை அடுத்து, வரும் 19-ஆம் தேதி திருப்பனந்தாள் காவல் நிலைய ஆய்வாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories