அமெரிக்காவில் இலக்கியம், பத்திரிகை, எழுத்து, இசை ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்களுக்கு 1917 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் புலிட்சர் விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில் 2015ம் ஆண்டுக்கான விருதுகள் புதன் அன்று அறிவிக்கப்பட்டன. தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட மென்பொருள் பொறியாளர் பழனி குமணன் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையில் பணியாற்றிவரும் பழனி குமணன், அமெரிக்காவில் மருத்துவக் காப்பீட்டுத் துறையின் மூலம் நோயாளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு இடையிலான சுமார் 8 லட்சத்து 80 ஆயிரம் பணப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க தேவையான தகவல் தொகுப்பாக ஒரு டேட்டா பேஸ் உருவாக்கியதற்காக இதே பத்திரிகையைச் சேர்ந்த கிராபிக்ஸ் குழுவினருடன் இணைந்து இந்த உயரிய புலிட்ஸர் விருதினைப் பகிர்ந்து கொள்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending