புதுவை போலீசாரை தாக்கிய ரௌடி… முதல் முறையாக கால் கையை உடைத்துக்கொண்டு…

pudhuchery - 2026

போலீசாரை தாக்கிய ரவுடி கைது செய்யப்பட்டார். புதுச்சேரியில் காவலர்களைத் தாக்கிய ரவுடி ஜோசப்ராஜ் வலது கை, இடது கால் முறிந்தது. புதுச்சேரியில் ரவுடி பாத்ரூமில் வழுக்கி விழுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத் தக்கது.

புதுச்சேரி, கரிகலாம்பாக்கத்தில் நேற்று இரவு ரோந்து பணியில் அப் பகுதியைச் சேர்ந்த காவலர்கள் மைக்கேல், சிவகுரு ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீஸாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளான ஜோசப் ராஜ் மற்றும் ரோஸ் அய்யனார் ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் இருவரையும் அழைத்து காவலர்கள் இருவரும் விசாரித்தனர்.

அப்போது, திடீரென காவலர்களை குற்றவாளிகள் இருவரும் தாக்கினர். அவர்களை போலீஸாரும் திருப்பித் தாக்கினர். அப்போது இரு தரப்பினரும் நடுசாலையில் கட்டிப் புரண்டனர். இதனை அருகில் நின்றிருந்தவர்கள் வீடியோ பதிவு செய்து, சமூக வலைத்தளங்களில் பரப்பினர்.

இந்த வீடியோ வைரலானதால், அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர், ரோஸ் அய்யனார் மற்றும் ஜோசப் ராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர்.

தொடர்ந்து, வில்லியனூர் போலீசார் மற்றும் அதிரடிப்படை போலீசாரின் தீவிர தேடுதலில், ஜோசப், கண்டமங்கலம் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதை அடுத்து போலீசார் அங்கு சென்றனர். கண்டமங்கலத்தை அடுத்த ஆலமரத்து குப்பம் கரும்பு தோட்டத்தில் ஜோசப் பதுங்கி இருப்பதைக் கண்டு அவனைக்கைது செய்யச் சென்றனர். ஆனால், போலீசார் வருவதைக் கண்டு ஜோசப் தப்பித்து ஓடினான். அவனை போலீசார் விரட்டிச் சென்று பிடித்த போது, அவன் கீழே விழுந்து இடது கை முறிந்துபோனதாக போலீஸார் கூறியுள்ளன.

பின்னர் அவனை போலீசார் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories