சென்னை:
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வசதியாக தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளுக்கு விலக்கு அளித்து மத்திய அரசு கொண்டு வந்த அறிவிப்பாணையை உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிப்பதும் ஒத்திப் போடப்பட்டே வந்தது. இதனால், தமிழக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் சென்னை மெரினா, மதுரை அலங்காநல்லூர் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது. ஜன.,23ல் இதற்கான சட்டமுன்வடிவு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு நிரந்த சட்டமாக நிறைவேற்றப்பட்டது.
இதன்பின்னர், இந்தச் சட்டத்தை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்தியாசாகர் ராவ் அனுப்பி வைத்தார். மிருகவதை தடுப்பு சட்டம் – 217( தமிழ்நாடு திருத்தம்) என்ற சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி திங்கள் கிழமை இன்று ஒப்புதல் அளித்தார். இந்நிலையில், ஜல்லிக்கட்டு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.
ஜல்லிக்கட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
இது குறித்து அவர் தமது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது…
Now #Jallikattu is permanent!!
Hon President of India has permitted the Jallikattu Ordinance conceded by Tamilnadu Government.
— திரு O.Panneerselvam (@CMOTamilNadu) January 30, 2017