திருமணத்திற்கு மறுத்த காதலன்! மாணவி ரயிலில் பாய்ந்து தற்கொலை!

Published:

thandavala acc 1 - 2026

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கொண்டசாமி நகரை சேர்ந்தவர் கவுசிகாதேவி. கல்லூரி மாணவியான இவரும், அங்கு தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் ரமேஷும் காதலித்து வந்தனர். இருவரும் பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர்.

மாணவியைக் கல்யாணம் செய்து கொள்வதற்கு ரமேஷ் காலதாமதம் செய்து பல காரணங்களைத் தொடர்ந்து கூறி வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் இருவரும் சந்தித்து பேசாமல் இருந்தனர்.இந்த நிலையில் ரமேஷ், கவுசிகாதேவிக்கு போன் செய்து உன்னுடன் பேச வேண்டும் வா என்றார். இதையடுத்து கவுசிகா தேவி அவரை சந்திப்பதற்காக சென்றார். பின்னர் அவர்கள் பெரியநாயக்கன்பாளையம் வீரபாண்டி பிரிவு அருகே சந்தித்து பேசி கொண்டிருந்தனர்.

sandai - 2026

அப்போது திடீரென அவர்கள் 2 பேருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதில் வாக்குவாதம் முற்றவே மனம் உடைந்த கவுசிகா தேவி அந்த பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்திற்கு சென்றார்.

பின்னர் அந்த வழியாக இரவு 8 மணியளவில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு வந்த நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில் தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி சம்பவ இடத்திலேயே கவுசிகாதேவி பரிதாபமாக உயிரிழ்ந்தார்.

ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கவுசிகாதேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img