சென்னை : நெல்லையில் வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி இன்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த திமுக.,வின் டி.கே.எஸ்.இளங்கோவன், சிபிசிஐடி உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறுவதால் இதுபோன்று அதிகாரிகள் தற்கொலை தொடரத்தான் செய்யும். அவர்களும் இது போன்று இன்னும் நிறைய வழக்குகளை விசாரிக்க வேண்டி இருக்கும். அக்ரி கிருஷ்ணமூர்த்தியை வேண்டுமானால் சிபிசிஐடி கைது செய்திருக்கலாம். ஆனால் இவ்வழக்கை சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending