December 5, 2025, 3:55 PM
27.9 C
Chennai

சமூக விரோதிகளை களை எடுக்கவே துணை ராணுவம்?: பதறும் திருமுருகன் காந்தி

thirumurugan gandhi - 2025

அண்மைக் காலமாக காவிரி பாசனப் பகுதிகளில், விவசாயிகள் என்னும் போர்வையிலும், விவசாயிகளுக்கு ஆதரவானவர்கள் என்னும் முகமூடியிலும் சமூக விரோத தேச விரோத சக்திகள் பின்னிருந்து இயங்குவதும், தேசப் பிரிவினைக் கருத்துக்களை மக்களிடையே பரப்பி மக்களை அச்சத்திலும் அமைதியின்மையிலும் ஆக்கி போராட்டத்தைத் தூண்டி வருவதும் சமூக ஆர்வலர்களுக்கு பெரும் கவலையைத் தந்துள்ளது.

நியாயமான கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்துவது ஒருவரின் தனிநபர் உரிமை என்றாலும், ஒருவரைத் தூண்டிவிட்டு, தங்கள் சுயநலனில் தேசப்பிரிவினை எண்ணங்களை பிரசாரம் செய்வது, தேசத் துரோகச் செயல்கள் மட்டுமல்ல, அப்பாவிகளை பலிகடாவாக்கும் அற்பத்தனமான செயல்களும் கூட! இந்தச் சூழ்நிலை தமிழகத்தில், குறிப்பாக காவிரி பாசன பகுதிகளில் பரவலாக மேற்கொள்ளப் பட்டுவருவதை தமிழக உளவுத் துறை மட்டுமல்லாது மத்திய உளவுத் துறையும் அரசுக்கு அறிக்கை அனுப்பி தெளிவித்துள்ளது.

தற்போது தொடர் போராட்டங்களால் காவிரி பாசன பகுதியில் அமைதியின்மையை ஏற்படுத்தி வரும் நபர்கள் குறித்து கண்காணித்து, பொது அமைதியை சீர் செய்திட பலரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், கடந்த ஓரிரு நாட்களாக துணை ராணுவப் படையினர் கும்பகோணம் உள்ளிட்ட காவிரி பாசன பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர். இது வழக்கமான பாதுகாப்பு பயிற்சி என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினாலும், மக்களின் அச்சத்தைப் போக்கவே இந்த ரோந்து நடவடிக்கை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில்,  மே 17 எனும் இயக்கத்தை நடத்தி வரும் திருமுருகன் காந்தி, டெல்டா மாவட்டங்களில் தமிழின உரிமையை அழிக்கவே துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளார்.

தஞ்சை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களும் அரசியல் கட்சியினர்களும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் மக்களின் எதிர்ப்பை மீறி தொடர்ந்து மீத்தேன் எடுத்து வரும் நிலையில்,  மீத்தேனுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் நடத்த அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் தயாராகி வந்த நிலையில் திடீரென நேற்று மத்திய அதிரடி படையினர் டெல்டா மாவட்டங்களில் குவிக்கப்பட்டனர்.

இதுகுறித்துப் பேசிய மே 14 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ”தமிழின அழிப்பிற்கான முதல் அறிகுறியாக காவிரி டெல்டாவில் துணை ராணுவம் இறக்கப்பட்டிருக்கிறது’ என்று கூறியுள்ளார்.

3 COMMENTS

  1. இந்தப் பொறுக்கிப்பசங்களைப் பூண்டோடு களை எடுக்க வேண்டும். தேசத்துரோகிகளை அடியோடு ஒழிப்போம்.

  2. சென்ட்ரல் போலீசா பார்த்தா திருட்டு பயலுகா தான் பயப்படனும்
    திருமுருகன்காந்தி ஏன் பயப்படனும் டூமில் போராளிகளுக்கு ஆப்பு ரெடி….

  3. இது போன்ற விஷஜந்துக்களை தயவு தாட்சம் பாராமல் ஒடுக்க வேண்டும் அல்லது என்கௌண்டரில் ஒழிக்க வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories