சமூக விரோதிகளை களை எடுக்கவே துணை ராணுவம்?: பதறும் திருமுருகன் காந்தி

thirumurugan gandhi - 2026

அண்மைக் காலமாக காவிரி பாசனப் பகுதிகளில், விவசாயிகள் என்னும் போர்வையிலும், விவசாயிகளுக்கு ஆதரவானவர்கள் என்னும் முகமூடியிலும் சமூக விரோத தேச விரோத சக்திகள் பின்னிருந்து இயங்குவதும், தேசப் பிரிவினைக் கருத்துக்களை மக்களிடையே பரப்பி மக்களை அச்சத்திலும் அமைதியின்மையிலும் ஆக்கி போராட்டத்தைத் தூண்டி வருவதும் சமூக ஆர்வலர்களுக்கு பெரும் கவலையைத் தந்துள்ளது.

நியாயமான கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்துவது ஒருவரின் தனிநபர் உரிமை என்றாலும், ஒருவரைத் தூண்டிவிட்டு, தங்கள் சுயநலனில் தேசப்பிரிவினை எண்ணங்களை பிரசாரம் செய்வது, தேசத் துரோகச் செயல்கள் மட்டுமல்ல, அப்பாவிகளை பலிகடாவாக்கும் அற்பத்தனமான செயல்களும் கூட! இந்தச் சூழ்நிலை தமிழகத்தில், குறிப்பாக காவிரி பாசன பகுதிகளில் பரவலாக மேற்கொள்ளப் பட்டுவருவதை தமிழக உளவுத் துறை மட்டுமல்லாது மத்திய உளவுத் துறையும் அரசுக்கு அறிக்கை அனுப்பி தெளிவித்துள்ளது.

தற்போது தொடர் போராட்டங்களால் காவிரி பாசன பகுதியில் அமைதியின்மையை ஏற்படுத்தி வரும் நபர்கள் குறித்து கண்காணித்து, பொது அமைதியை சீர் செய்திட பலரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், கடந்த ஓரிரு நாட்களாக துணை ராணுவப் படையினர் கும்பகோணம் உள்ளிட்ட காவிரி பாசன பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர். இது வழக்கமான பாதுகாப்பு பயிற்சி என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினாலும், மக்களின் அச்சத்தைப் போக்கவே இந்த ரோந்து நடவடிக்கை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில்,  மே 17 எனும் இயக்கத்தை நடத்தி வரும் திருமுருகன் காந்தி, டெல்டா மாவட்டங்களில் தமிழின உரிமையை அழிக்கவே துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளார்.

தஞ்சை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களும் அரசியல் கட்சியினர்களும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் மக்களின் எதிர்ப்பை மீறி தொடர்ந்து மீத்தேன் எடுத்து வரும் நிலையில்,  மீத்தேனுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் நடத்த அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் தயாராகி வந்த நிலையில் திடீரென நேற்று மத்திய அதிரடி படையினர் டெல்டா மாவட்டங்களில் குவிக்கப்பட்டனர்.

இதுகுறித்துப் பேசிய மே 14 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ”தமிழின அழிப்பிற்கான முதல் அறிகுறியாக காவிரி டெல்டாவில் துணை ராணுவம் இறக்கப்பட்டிருக்கிறது’ என்று கூறியுள்ளார்.

3 COMMENTS

  1. இந்தப் பொறுக்கிப்பசங்களைப் பூண்டோடு களை எடுக்க வேண்டும். தேசத்துரோகிகளை அடியோடு ஒழிப்போம்.

  2. சென்ட்ரல் போலீசா பார்த்தா திருட்டு பயலுகா தான் பயப்படனும்
    திருமுருகன்காந்தி ஏன் பயப்படனும் டூமில் போராளிகளுக்கு ஆப்பு ரெடி….

  3. இது போன்ற விஷஜந்துக்களை தயவு தாட்சம் பாராமல் ஒடுக்க வேண்டும் அல்லது என்கௌண்டரில் ஒழிக்க வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories