விடுமுறை நாட்களிலும் புறநகர் விரைவு ரயில் கோரி போராட்டம்: தாம்பரத்தில் ரயில் போக்குவரத்து பாதிப்பு

rail tambaram - 2026

சென்னை: விடுமுறை நாட்களிலும் விரைவு மின்சார ரயில்களை இயக்க வேண்டும் என்று கோரி, தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே திங்கள் முதல் வெள்ளி வரை, புறநகர் மின்சார விரைவு ரயில்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் இயக்கப் படுகின்றன. திருமால்பூரில் இருந்து கடற்கரை வரை செல்லும் விரைவு ரயில், காலை நேரத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பெருங்களத்தூர், தாம்பரம், கிண்டி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இதனால், பணிக்குச் செல்வோர் உள்பட பலரும் விரைவில் சென்றுவிடலாம்.

பொதுவாக செங்கல்பட்டில் இருந்து கடற்கரை செல்லும் விரைவு ரயில்கள், தாம்பரம் – கடற்கரை இடையேதான் விரைவு ரயில்களாகச் செல்லும். இந்த ரயில்கள், தாம்பரம், குரோம்பேட்டை, கிண்டி, மாம்பலம், எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும்.

இதனால் இந்த ரயிலில் பயணிப்பவர்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு விரைவாக சென்று விட முடியும். இந்த விரைவு மின்சார ரயில்களை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சாதாரண மின்சார ரயில்களாக மாற்றி இயக்குகிறது ரயில்வே நிர்வாகம்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாம்பரத்தில், பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விரைவு மின்சார ரயிலை சாதாரண ரயிலாக இயக்குவதால் தாங்கள் அலுவலகம் செல்ல தாமதமாவதாகக் கூறி இரண்டு ரயில்களை அவர்கள் சிறை பிடித்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரயில் பாதையை மறித்து போராட்டம் நடத்தியதால் தாம்பரம் – கடற்கரை இடையிலான வழியில் மின்சார ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதன் பின்னர் அங்கு வந்த ரயில்வே துறை உயரதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இதையடுத்து மூன்று மணி நேரத்திற்குப் பின்னர் போராட்டம் கைவிடப்பட்டு செங்கல்பட்டு – கடற்கரை இடையே மின்சார ரயில் போக்குவரத்து சீரானது.

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories