December 5, 2025, 4:55 PM
27.9 C
Chennai

விடுமுறை நாட்களிலும் புறநகர் விரைவு ரயில் கோரி போராட்டம்: தாம்பரத்தில் ரயில் போக்குவரத்து பாதிப்பு

rail tambaram - 2025

சென்னை: விடுமுறை நாட்களிலும் விரைவு மின்சார ரயில்களை இயக்க வேண்டும் என்று கோரி, தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே திங்கள் முதல் வெள்ளி வரை, புறநகர் மின்சார விரைவு ரயில்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் இயக்கப் படுகின்றன. திருமால்பூரில் இருந்து கடற்கரை வரை செல்லும் விரைவு ரயில், காலை நேரத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பெருங்களத்தூர், தாம்பரம், கிண்டி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இதனால், பணிக்குச் செல்வோர் உள்பட பலரும் விரைவில் சென்றுவிடலாம்.

பொதுவாக செங்கல்பட்டில் இருந்து கடற்கரை செல்லும் விரைவு ரயில்கள், தாம்பரம் – கடற்கரை இடையேதான் விரைவு ரயில்களாகச் செல்லும். இந்த ரயில்கள், தாம்பரம், குரோம்பேட்டை, கிண்டி, மாம்பலம், எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும்.

இதனால் இந்த ரயிலில் பயணிப்பவர்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு விரைவாக சென்று விட முடியும். இந்த விரைவு மின்சார ரயில்களை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சாதாரண மின்சார ரயில்களாக மாற்றி இயக்குகிறது ரயில்வே நிர்வாகம்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாம்பரத்தில், பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விரைவு மின்சார ரயிலை சாதாரண ரயிலாக இயக்குவதால் தாங்கள் அலுவலகம் செல்ல தாமதமாவதாகக் கூறி இரண்டு ரயில்களை அவர்கள் சிறை பிடித்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரயில் பாதையை மறித்து போராட்டம் நடத்தியதால் தாம்பரம் – கடற்கரை இடையிலான வழியில் மின்சார ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதன் பின்னர் அங்கு வந்த ரயில்வே துறை உயரதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இதையடுத்து மூன்று மணி நேரத்திற்குப் பின்னர் போராட்டம் கைவிடப்பட்டு செங்கல்பட்டு – கடற்கரை இடையே மின்சார ரயில் போக்குவரத்து சீரானது.

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories