டிஎன்எஸ்டிசி.,யில் நிதி நெருக்கடி: மதுரை கோட்டத்துடன் இணைகிறது நெல்லை கோட்டம்!

sandeepnaduri nellai busstand - 2026


  • நிதி நெருக்கடி காரணமாக, மீண்டும் மதுரை கோட்டத்துடனேயே இணைகிறது நெல்லை கோட்டம்
  • 2010ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது நெல்லை கோட்டம்
  • சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது நெல்லை மண்டலம் #TNSTC

சென்னை: கடும் நிதி நெருக்கடி, நஷ்டத்தில் இயங்கி வரும் போக்குவரத்துக் கழக கோட்டம் என சிக்கல்களால் தவித்த அரசு போக்குவரத்து கழக நெல்லை கோட்டம், மதுரை மண்டலத்துடனேயே இணைக்கப் பட்டது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சென்னை, மதுரை, நெல்லை, கோவை, கும்பகோணம், சேலம் என 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. பஸ்கள் இயக்கம் மூலம் போக்குவரத்துக் கழகங்களுக்கு சுமார் ரூ.26 கோடி கிடைக்கிறது. ஆனால், செலவோ பல மடங்கு செல்கிறது.

வரவுக்கு மீறிய செலவினங்களால்  அரசு போக்குவரத்துக் கழகங்கள் ஒவ்வொரு நாளும் நஷ்டத்தில் தள்ளாடுகின்றன. ஒவ்வொரு நாளும் சுமார் ரூ.14 கோடி வரை போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவதாகக் கணக்கிடப் பட்டுள்ளது. இந்த நிதி நெருக்கடியை சமாளிக்க அமைக்கப் பட்ட வல்லுநர் குழு தெரிவித்த யோசனைப் படி, செலவை குறைக்கும் வகையில் போக்குவரத்துக் கழகங்களை இணைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.

முதல் கட்டமாக, திருநெல்வேலியை மதுரை போக்குவரத்துக் கழகத்துடன் இணைக்க அறிவுறுத்தப் பட்டது. கடந்த 2010-ல் நெல்லை புதிய மண்டலமாக உருவாக்கப்பட்டது. நெல்லை மண்டலத்தில் 30 பணிமனைகள் உள்ளன. அவற்றில் 1897 பஸ்கள் உள்ளன. இவற்றுக்காக 12,478 பேர் இந்த மண்டலத்தில் பணிபுரிகின்றனர்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

தமிழ்நாட்டிலேயே நெல்லையில்தான் பஸ்கள் மோசமாக பராமரிக்கப் படுகின்றன என்று கூறப்படுகிறது. மற்ற மண்டலங்களில் இருந்து கழித்துக் கட்டிய பேருந்துகளை நெல்லைக்கு அனுப்பி வைத்து விடுவார்கள் என்றும், இங்கே இயக்கப்படும் 90 சதவீத பேருந்துகள் காலாவதியானவை என்றும் கூறப் படுகின்றன. இங்கு ஆண்டுக்கு சுமார் 2,000 கோடி நஷ்டம் ஏற்படுவதால், இந்த மண்டலத்தை மதுரையுடன் இணைத்துவிட்டால் செலவு குறையும் என அறிக்கை தரப்பட்டது.

இதை அடுத்து, திருநெல்வேலி போக்குவரத்துக் கழகம் மதுரையுடன் இணைக்கப் பட்டுள்ளதாக இன்று அரசாணை வெளியிடப் பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories