டிஎன்எஸ்டிசி.,யில் நிதி நெருக்கடி: மதுரை கோட்டத்துடன் இணைகிறது நெல்லை கோட்டம்!

sandeepnaduri nellai busstand - 2026


  • நிதி நெருக்கடி காரணமாக, மீண்டும் மதுரை கோட்டத்துடனேயே இணைகிறது நெல்லை கோட்டம்
  • 2010ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது நெல்லை கோட்டம்
  • சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது நெல்லை மண்டலம் #TNSTC

சென்னை: கடும் நிதி நெருக்கடி, நஷ்டத்தில் இயங்கி வரும் போக்குவரத்துக் கழக கோட்டம் என சிக்கல்களால் தவித்த அரசு போக்குவரத்து கழக நெல்லை கோட்டம், மதுரை மண்டலத்துடனேயே இணைக்கப் பட்டது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சென்னை, மதுரை, நெல்லை, கோவை, கும்பகோணம், சேலம் என 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. பஸ்கள் இயக்கம் மூலம் போக்குவரத்துக் கழகங்களுக்கு சுமார் ரூ.26 கோடி கிடைக்கிறது. ஆனால், செலவோ பல மடங்கு செல்கிறது.

வரவுக்கு மீறிய செலவினங்களால்  அரசு போக்குவரத்துக் கழகங்கள் ஒவ்வொரு நாளும் நஷ்டத்தில் தள்ளாடுகின்றன. ஒவ்வொரு நாளும் சுமார் ரூ.14 கோடி வரை போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்குவதாகக் கணக்கிடப் பட்டுள்ளது. இந்த நிதி நெருக்கடியை சமாளிக்க அமைக்கப் பட்ட வல்லுநர் குழு தெரிவித்த யோசனைப் படி, செலவை குறைக்கும் வகையில் போக்குவரத்துக் கழகங்களை இணைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.

முதல் கட்டமாக, திருநெல்வேலியை மதுரை போக்குவரத்துக் கழகத்துடன் இணைக்க அறிவுறுத்தப் பட்டது. கடந்த 2010-ல் நெல்லை புதிய மண்டலமாக உருவாக்கப்பட்டது. நெல்லை மண்டலத்தில் 30 பணிமனைகள் உள்ளன. அவற்றில் 1897 பஸ்கள் உள்ளன. இவற்றுக்காக 12,478 பேர் இந்த மண்டலத்தில் பணிபுரிகின்றனர்.

தமிழ்நாட்டிலேயே நெல்லையில்தான் பஸ்கள் மோசமாக பராமரிக்கப் படுகின்றன என்று கூறப்படுகிறது. மற்ற மண்டலங்களில் இருந்து கழித்துக் கட்டிய பேருந்துகளை நெல்லைக்கு அனுப்பி வைத்து விடுவார்கள் என்றும், இங்கே இயக்கப்படும் 90 சதவீத பேருந்துகள் காலாவதியானவை என்றும் கூறப் படுகின்றன. இங்கு ஆண்டுக்கு சுமார் 2,000 கோடி நஷ்டம் ஏற்படுவதால், இந்த மண்டலத்தை மதுரையுடன் இணைத்துவிட்டால் செலவு குறையும் என அறிக்கை தரப்பட்டது.

இதை அடுத்து, திருநெல்வேலி போக்குவரத்துக் கழகம் மதுரையுடன் இணைக்கப் பட்டுள்ளதாக இன்று அரசாணை வெளியிடப் பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories