மலேசியாவிலிருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமானத்தில் வந்தபயணிகளை சுங்கத்துறை வான்நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது மலேசியாவை சேர்ந்த மஜ்துனிசா பானு என்பவர் அணிந்து வந்த செயின், வளையல், கைச் செயின் உட்பட நகைகளை சோதனை செய்தனர். அப்போது அவர் உடலில் அணிந்தபடி மறைத்து எடுத்து வந்த ரூபாய் 40.09 லட்சம் மதிப்புள்ள 1299 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்..


